Friday, May 25, 2007

Sheet Piling

போன பதிவில் Coffer Dam பற்றி சொல்லியிருந்தேன்.இப்போது அதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஷீட் பைல் என்று சொல்லப்படுகிற இரும்பு ஷீட்கள்.இவை பல வகைகளில் வருகிறது.நாங்கள் உபயோகப்படுத்தியது கீழ்கண்ட வகையை.
மேலிருந்து பார்த்தால் இப்படி இருக்கும்.

ஒன்று மற்றொன்றுடன் இணைவதை மேலே பாருங்கள்.


இதற்கு தேவையான இயந்திரங்களும் சாமான்களும் கீழே கொடுத்துள்ளேன்.
1.தெப்பம் (Barge)
2.பாரம் தூக்கி (Crane)
3.Vibro Hammer

4.ஸ்டீல் பீம்.


சரி இப்போது நம்முடைய வேலை ஆற்றின் நடுவே உள்ளது .. அதை எப்படி செய்வார்கள் என்று பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் இருக்கிற மாதிரி தெப்பமும் அதன் மேல் இருக்கும் பாரம் தூக்கியையும் டக் போட் என்று சொல்லப்படுகிற போட்டுடன் இணைத்துவிடுவார்கள்.அதன் மூலம் தெப்பத்தை தண்ணீரில் நிலை நிறுத்துவார்கள்.

தேவையான இடத்தை சர்வே இன்ஸ்டுருமென்ட் மூலம் சரி செய்துகொண்டு,தெப்பத்தின் முன்னும் பின்னும் இரு ஸ்டீல் பீம்களை அடித்து நதியின் கீழ் இறக்குவார்கள்.பிறகு அதை நன்கு பலப்படுத்திய பிறகு அந்த ஸ்டீல் பீமுடன் அந்த தெப்பத்தை கட்டிவிடுவார்கள்.

கடல் மட்டத்திற்கு தகுந்தவாறு ஆற்றின் நீர் மட்டமும் ஏறி இறங்குவதால்,தெப்பமும் ஏறி இறங்குவதற்கு தகுந்த மாதிரி கயிறு போட்டு கட்டிவிடுவார்கள்.

அதன் பிறகு பாரம் தூக்கி மற்றும் Vibro Hammer மூலம் ஒவ்வொறு ஷீட் பைலாக அடிப்பார்கள்.நதியின் அடியில் இருக்கும் மண் கீழே போய் சரியாக உட்கார்ந்துவிடும்.இப்படி ஒவ்வொன்றாக அடித்து முடிந்தவுடன் கீழ் கண்ட மாதிரி இருக்கும்.நாம் வேலை செய்யப்போவது இதனுள் தான்.
இப்படி அடித்தாலும் இதன் உள் தண்ணீர் போய்கொண்டு தான் இருக்கும்,அதனால் தண்ணீர் கீழ் இறங்கும் போது மட்டுமே வேலை செய்ய முடியும்.கடல் நீர் ஏற்ற இறக்கங்கள் தெரிந்து கொள்ள கால அட்டவைணைகள் கிடைக்கும்.அதைப் பார்த்து இரவு 12 மணியோ விடிகாலை 2 மணியோ வந்து வேலை செய்துவிட்டு போக வேண்டும்.
சில சமயம் ஆற்றில் தலைப்பக்கம் மழை பெய்தால் நீர் வரத்து அதிகமாகி தண்ணீர் மட்டம் இறங்காமலே போய்விடக்கூடும்.

சரி இப்போது ஒரு Coffer Dam தயாராகிவிட்டது,அடுத்ததை செய்ய என்ன செய்ய வேண்டும்?ஒவ்வொரு தடவையும் தெப்பத்தை மாற்ற அந்த Tug Boat ஐ கூப்பிட்டால் 500 ரிங்கட்(மலேசிய பணம்) கொடுக்கவேண்டும்.அந்த பணத்தை சேமிக்க எங்கள் குத்தைகாரர் என்ன செய்வார் தெரியுமா?கொஞ்சம் இயற்கையோடு ஒன்றிப்போய் காரியத்தை முடித்துவிடுவார்.அது எப்படி பார்ப்போமா?
அடுத்த பதிவில்.

No comments: