Thursday, May 17, 2007

மெரினா கடற்கரை

2 வாரங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த போது வெகு நாட்களாக தள்ளிப்போட்டு வந்த இந்த இடத்துக்கு போய்விடுவது என்று முடிவெடுத்துக்கொண்டு கால் டேக்ஸி முன் பதிவு செய்துகொண்டோம்.
என் வீட்டிலும்,மச்சான் வீட்டிலும் குழுந்தைகளுக்கும் சொல்லியிருந்தோம்,அவர்களும் தயராக இருக்க,முதலிலேயே முடிவெடுத்த படி பெஸென்ட் நகர் அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போய் அதன் பின் பீச்சில் விளையாடலாம் என்று தான் நினைத்து போனோம்.
வயதில் பெரியவர்களும் வருவதால் மேல் சொன்ன இடத்துக்கு போகலாம் என்றிருந்தோம்,திடிரென்று அவர்கள் பின் வாங்கிவிட்டதால்,வண்டியில் ஏறியவுடனேயே சிருசுகள் மெரினா தான் போகவேண்டும் என்று அடம் பிடித்ததால், வண்டியை அங்கு விட்டோம்.

மாலை சுமார் 4.45க்கு அடைந்தோம்.

காந்தி சிலைக்கு முன்பு.


சாந்தோம் பீச்சில் உள்ள கலங்கரை விளக்கம்.

லோ டைட் என்பதால் கடல் உள்வாங்கியிருந்தது.


மேலும் சில பீச் படங்கள்



ஷூட் பண்ண முயற்சிக்கும் சிறுவர்கள்.



உள்ளே நுழையும் இடத்திலேயே மாங்காய் துண்டு கண்ணைப்பறிக்க ஆளுக்கு ஒன்று வாங்கிச் சாப்பிட்டோம்.

நாங்கள் கால் வைக்கும் நேரம் கடல் அலை குறைந்து காணப்பட்டது.லோ டைட் யில் இருந்து ஹை டைட் ஆரம்பிக்கும் நேரம் போலும்.முதலில் கால் நனைக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது.ஒரு சமயத்தில் உருண்டோடி வந்த சிறு அலை காலை மட்டும் அல்லாமல் உள்ளாடையையும் நனைக்க... அப்புறம் என்ன? முழுவதுமாக நனைந்து,குளித்துவிட்டு வந்தோம்.கடலில் குளித்து 2 மாமாங்கம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

குளித்து முடித்தவுடன் எடுத்த புகைப்படம் கீழே..வேண்டாம் பூணூல் தெரியும்.:-))

அன்று பௌர்னமி என்பதால்,சந்திரன் எழும் நேரத்துகாக கொஞ்சம் நேரம் காத்திருந்தோம்.அப்போது கொஞ்சம் மேக மூட்டமாக இருந்ததால் சந்திரன் வெளியே வர கொஞ்சம் நேரம் ஆனது.சுமார் 6.40க்கு கண்ணுக்கு தெரிந்ததும், கொண்டுபோயிருந்த தொலைநோக்கி மூலம் பார்த்தோம்.அருமையாக தெரிந்தது.
மக்கள் கூட்டம், பள்ளி விடுமுறை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

பீச்சுக்கு வந்த பிறகு யாராவது வீட்டில் போய் சமைத்து சாப்பிடுவார்களா? என்ன?

எந்த ஹோட்டலுக்கு போவது என்ற கலந்துரையாடலுக்கு பிறகு வரும் வழி என்பதால் சிங்கை புகழ் "கோமள விலாஸ்" போகலாம் என்று முடிவானது.ஜெமினி மேம்பாலத்தை தாண்டிய உடனே இடது பக்கம் திரும்பி கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டது.சிங்கை Styleலில் பக்கத்திலேயே "Ganges" ம் இருந்தது.ஆனால் கூட்டம் தான் சற்று குறைவாக இருந்தது.ஊள்ளூர் மக்களை அவ்வளவாக பார்க்கமுடியவில்லை.
அவரவருக்கு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு பில்லோடு கொசுறையும் சேர்த்து ருபாய் 500 கொடுத்தோம்.எங்களை கவனித்தவர் உள்ளூர்காரரா அல்லது சிங்கைகாரரா? என்று தெரியவில்லை, அவ்வளவு பொருமையா கவனித்தார்.
ஒரு மாலைப்பொழுது நல்லவிதமாக கரைந்தது.

No comments: