Wednesday, March 26, 2008

சிங்கையில் பள்ளி

குடும்பத்தை அழைத்து வர தேவையான வேலைகளை முடித்த பிறகு தங்குவதற்கான இடத்தை தேட ஆரம்பித்த பிறகு இதில் உள்ள நெளிவு சுளிவுகள் தெரியவந்தன.

சுமாராக ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கு ஓறை வீடு போதுமானது ஆனால் அந்த மாதிரி வீடுகள் வாடகைக்கு கிடைக்காது ஏனென்றால் அவை “சேவா” வீடு என்று இங்குள்ள குறைந்த சம்பளம் உள்ளவர்களுக்காக வீடமைப்பு கழகத்தால் கொடுக்கப்படுவது.சரி,ஈரறை வீடுகளை பார்க்கலாம் என்றால் சம்பளத்தில் பாதியை வைக்கவேண்டி இருந்தது.பிழைக்க வந்துவிட்டு பாதியை வாடகைக்கே கொடுத்துவிட்டு மீதியை என்ன செய்வது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.அதோடு எந்த இடத்தில் வீடு பார்ப்பது என்ற குழப்பமும்.கூடிய வரை ஆரம்ப பள்ளி பக்கத்தில் இருக்குமாறு பார்க்கலாம் என்று நினைத்து வாடகை வீடு பார்க்கும் முகவரை அனுகினேன்.

என்னுடைய நிலமை மற்றும் என்னுடைய நிதிநிலமையை கருத்தில்கொண்டு அந்த முகவர் வேறொரு யோஜனையை முன் வைத்தார்.ஆதாவது ஒரு அறையை வாடகையை எடுத்துக்கொள்வது,அதில் கொஞ்ச நாள் தங்கிக்கொண்டு மேற்கொண்டு யோசிப்பது.

இந்த யோஜனை சரியாக வரும் என்று தோன்றியதால் அப்படியே பார்க்கும்படி சொன்னேன்.

அவர் பார்த்த இடங்களில் எல்லாம் குடும்பத்துக்கு வீடு கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் அதோடு நாங்கள் சமைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்தனர்.

இப்படியே நாட்கள் போய்கொண்டிருந்த போது ஒரு நாள் முகவர் அழைத்து ஓர் அறை மட்டும் வாடகைக்கு விடுகிறார்களாம் அவர்களும் இந்தியர்கள் தான்,பார்க்கலாமா? என்றார்.வேறு வழியில்லாத்தால் போய் பார்த்தேன்.

600 வெள்ளி வாடகை வேறு சாமான்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை.நம் அவசரத்துக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என்று ஒப்புக்கொண்டு தங்க ஆரம்பித்தேன்.மனைவி மக்களும் வந்த பிறகு அந்த ஒரு அறை போதவில்லை அதுவும் இல்லாமல் அந்த வீட்டு ஓனர் தொல்லைகளும் அதிகமாக ஆரம்பித்தது.

சமைத்து நாங்கள் சாப்பிடவைத்திருக்கும் பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்தது அன்புத்தொல்லையாக எங்களையே சமைக்கச்சொல்லி கேட்க ஆரம்பித்தார்கள்.அதோடிலில்லாமல் அவர்கள் பையன் பிரச்சனை என்று வீட்டின் உள் வேறு பிரச்சனைகளும் எழ ஆரம்பித்தது.

அந்த சம்யத்தில் பையனின் பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து ஒரு பள்ளியில் போய் விஜாரித்தோம்.அதன் முதல்வர் விபரங்கள் கேட்டு நுழைவு தேர்வு எழுதச்சொல்லி அப்போதே தேர்வும் வைத்துவிட்டார்.அதன் முடிவுகளை அப்போதே பார்த்துவிட்டு உங்கள் மகனை Primary ஒன்றிலிருந்து வரச்சொல்லுங்கள்,அப்போது தான் அவன் அடிப்படை நன்றாக இருக்கும் என்றார்.மகனின் படிப்பில் சுமார் 1.5 வருடங்கள் துண்டு விழுவது கண்டு அதிர்ந்தேன்.சரி மற்றொரு பள்ளியில் முயற்சிக்கலாம் என்று வேறொரு பள்ளிக்கு போன போது அங்குள்ள முதல்வர்,முதலில் நீங்கள் போன பள்ளி சொன்னது தான்,வேறு வழியில்லை என்றார்.அப்போது தான் சிங்கையில் உள்ள Network புரிந்தது.

முதல் பள்ளி தேர்வு வைத்தவுடனே அதை அவர்கள் துறைக்கு அனுப்பிவிட்டார்கள் போலும்,அதனால் எங்கு போனாலும் இதே பதில் தான் கிடைக்கும் என்பது தெரிந்து போனது.
வேறு வழியில்லாமல் பையனை முதல் வகுப்பில் சேர்த்தேன்.1.5 வருடங்கள் அனாமத்தாக போனது.

Wednesday, March 19, 2008

சிங்கை- முதல் வேலையிட படங்கள்

இந்த பதிவில் நான் சிங்கையில் வேலை செய்த இடத்தின் சில படங்களை போட்டிருக்கேன்,பாருங்கள்.

முகப்பு - பின்னால் இருப்பது PSA Tower என்று சொல்லப்படுகிற கட்டிடம்.



மற்றொரு கோணத்தில் இருந்து.முழு கட்டிடத்துக்கும் போர்வை போர்த்திய மாதிரி இந்த கண்ணாடி தடுப்புகளை போட்டுவிடுகிறார்கள்.இதனால் வெளிவெப்பம் உள்ளே வருவதில்லை அதே சம்யத்தில் உள்ளிருக்கும் குளிர் நிலையையும் கட்டுப்படுத்த இது பயணளிக்கிறது.



வருடா வருடம் நடக்கும் கம்பெனி நாள் அன்று - வேலையிடத்து சக தோழர்களுடன்..
நான் எங்கு இருக்கேன் என்று சொல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.



கிழே உள்ள சாலை வேலை செய்யும் இடத்தையும் முக்கிய சாலையையும் இணைக்கும் சாலை.



மீதியெல்லாம் எங்கே இருக்கோ தெரியவில்லை.

Wednesday, March 12, 2008

நிரந்தரவாசி

சேர்ந்த 2 மாதங்களுக்குள் வேலை அனுமதிசீட்டு கிடைத்தது அதன் பிறகு அடுத்த நிலையான நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு வேலை செய்யும் நிருவனத்தின் உதவி கட்டாயம் தேவைப்படும்,அவசியமில்லாவிட்டாலும்.என்னுடைய ஒப்பந்த விதிகளின்படி ஓராண்டு கழித்து தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஒரு வருடம் காத்திருந்தேன்.

இதற்கிடையில் பழைய கம்பெனியில் இருந்து, வருகிறாயா? இல்லை உன்னை வேலை நீக்கம் செய்யவா? என்று கடிதம் வந்தவுடன் தகப்பானரிடம் சொல்லி என்னுடைய Resignation கடிதத்தை அனுப்பினேன்.அப்படி இப்படி என்று 13 வருட இந்திய கட்டுமானத்துறை வாழக்கை முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் இருந்தவரை ஒரு லட்சம் ரூபாய் என்பது அடையமுடிய (13 வருடங்களுக்கு முன்பு) சங்கதியாக இருந்தும் இங்கு வந்து 4 மாதம் முடிந்தவுடன், ஏன் பலரும் வெளிநாடு நோக்கி ஓடுகிறார்கள் என்று புரிந்தது.புரிந்துகொண்டும் இருக்கிறது.

இந்த நிருவனத்தில் ஒரு வருடம் முடிந்தவுடன் நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பித்தேன்,அதற்கு முன்னால் என்னென்ன விபரங்கள் அளித்தால் விரைவாக பெறமுடியும் என்று பல அனுபவஸ்தர்கள் உபாயம் கொடுத்தார்கள்.

தெரிந்தவர்கள் பட்டியலில் உள்ளூர்வாசிகள் இருந்தால் நலம் என்பதால் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவரது பெயரை போடலாம் என்று நினைத்து அவரை அழைத்தேன்.விபரத்தை சொன்னவுடன்,சந்தோஷமாக ஒப்புக்கொண்டு அவருடைய விபரங்கள் கொடுத்து உதவினார்.அவர் போலிஸில் வேலை செய்து நல்ல பெயர் எடுத்திருந்ததால் என்னுடைய விண்ணப்பம் ஓரளவு எடுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த கால கட்டத்தில் பலருக்கும் விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதத்திலிருந்து 1 வருடம் கழித்து தான் நிரந்தரவாசத் தகுதி கிடைத்தது.அந்த எண்ணத்தில் விண்ணப்பித்த பிறகு அதை மறந்துவிட்டேன்.அதோடில்லாமல் என்னுடைய முகவரியை எனது சொந்தக்காரர் வீட்டின் முகவரியில் கொடுத்திருந்தேன்.எப்போதும் மாதம் ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு தொலைபேசுவேன்,ஒன்றும் சிறப்பு விஷயம் இல்லாததால் 3 மாதங்களாக அவர்களுக்கு தொலைபேசவில்லை.ஒரு நாள் ஞாபகம் வந்து அவர்களுக்கு தொலைபேசிய போது தான் என்னுடைய நிரந்தரவாச தகுதியை அங்கீகரித்திருப்பதாகவும் வந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேதியையும் கொடுத்திருந்ததாக சொன்னார்கள்.மிகவும் சந்தோஷமாக இருந்தது.நிரந்தரவாச தகுதி இருப்பதில் பல அனுகூலங்கள் உண்டு, இன்றும்.அவற்றில் சில..
1.வீடு வாங்க முடியும்
2.CPF உண்டு
3.குழந்தைகள் படிப்புக்கு செலவு குறைந்த பள்ளி கட்டணம்.
4.மருத்துவ செலவில் கழிவு உண்டு.
5.மிக முக்கியமாக உங்களை வேலைக்கு எடுக்க தயங்கமாட்டார்கள்.வேலை தான் கிடைக்கனும்.

அனுகூலம் மட்டும் தானா? என்றால்.. அது அவரவரின் தனிப்பட்ட பார்வையை பொருத்தது.

சரி, நிரந்தரவாச தகுதி கிடைத்தவுடன் மனைவி/மக்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது தான் பையன் இந்தியாவில் 2 வது வகுப்புக்கு போய் 3 மாதங்கள் ஆனது, இங்கு வந்தால் எந்த வகுப்பில் சேர்ப்பார்களோ என்ற குழப்பம் வேறு.

அது அடுத்த பதிவில்.

Tuesday, March 11, 2008

Auto-Cad 2008

அலுவலகத்தில் இந்த மென்பொருளை (புதியது என்ற சொல்ல அவசியம் இல்லை)
நிறுவினார்கள்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்..





இதன் பழைய வெர்ஷன்கள் ஆதாவது ஆட்டோ கேட் R13 போன்றவைகள் உபயோகித்தவர்களுக்கு இதன் முன்னேற்றம் வெளிப்படையாக தெரியும்.

ஒரு கோடு போட அதன் அளவு மற்றும் கோணம் என்று பலவற்றை திரையிலே அதுவும் மவுஸ் கர்சர் பக்கத்திலேயே தெரியும்படி அமைத்திருக்கார்கள்.அட்டகாசமாக இருக்கு.

கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

Sunday, March 9, 2008

தன்னம்பிக்கை

இந்த சலனப் படத்துக்கு விளக்கம் தேவையா என்ன?

இன்று காலை சன் தொலைக்காட்சியில் போட்டார்கள்.

வாழ்வின் எந்த அளவு எல்லைக்கு துரத்தப்பட்டிருந்தால் ஒரு பையன் இந்த அளவுக்கு பேச முடியும்???

பொது ஜனத்தின் கண்ணீர் மூலம் இக்குடும்பம் வாழ வழிகிடைத்தால் நல்லது.




காலத்தின் கொடுமை தான்.

நன்றி: சன் தொலைக்காட்சி.

Wednesday, March 5, 2008

கன்டெய்னர்

வந்த சில நாட்களிலேயே இங்குள்ள வேலை/வாழ்கை முறை பிடிபட ஆரம்பித்தது.

என்ன தான் உறவினர் வீட்டில் தங்கியிருந்தாலும் நான் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேட ஆரம்பித்தேன்.வாடகைக்கு அறை எடுக்கவேண்டும் ஆனால் எனக்கு வேலை அனுமதி சீட்டு கிடைக்காத பட்சத்தில் ஒரு வருட காலத்துக்கு எப்படி ஒரு அறை வாடகைக்கு எடுக்கமுடியும்?இந்த சைட்டில் என்னுடன் மேலும் ஒரு தமிழர் வேலை பார்த்துவந்தார் அவர் தினமும் வெளிநாட்டில் இருந்து தான் வேலைக்கு வருவார்.

என்னது வேலைக்கு வெளிநாட்டில்!! அதுவும் தினமுமா?

ஆமாம்.

இவர் மலேசியன்,மோட்டார் பைக் மூலம் தினமும் ஜோஹர் பாருவில் இருந்து சிங்கைக்கு வேலைக்கு வருவார்.இவரை மாதிரி பலரும் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.காரணம் Conversion Factor தான்.
இப்போதும் 1 சிங்கப்பூர் வெள்ளிக்கு 2.45 ரிங்கட் கிடைக்கிறது.வீடு மலேசியாவில் வேலை சிங்கப்பூரில்.

நான் வந்த புதிதில் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.என்னைப்போல் பல நாடுகளில் இருந்து இங்கு வேலை செய்ய வந்த மேற்பார்வையாளர்களுக்காகவும் இரவு வெகுநேரம் கழித்து முடிந்து வேலை இடத்திலேயே தூங்குவதற்காகவும் ஒரு கன்டெய்னரை சில படுக்கைகளுடன் ஒரு அறையாக மாற்றியிருந்தார்கள்.அதில் ஒரு சீன சீனர்,மலேசிய சீனர் & பிலிபைன்ஸ்காரர் இருந்தார்கள். என்னுடைய நிலமையை பார்த்த அந்த மலேசியர் அங்கு தங்கியிருப்பவர்கள் கூட பேசி என்னை அங்கேயே தங்க அவர்களின் அனுமதியை வாங்கினார்.

அடுத்த ஒரு சில நாட்களில் அந்த கன்டெயினர் அறைக்கு மாறினேன்.சாப்பாட்டுக்கு தினமும் வெளியில் பக்கத்தில் உள்ள Hawker செண்டர் போய் சாப்பிட்டு வந்தேன்.அதை பார்த்த ஒரு தொழிலாள நண்பர் அவரே சாப்பாடும் ஏதோ ஒரு குழம்பும் கொடுக்கிறேன் என்றார்.அதற்குண்டான பணத்தை கொடுத்துவிடுவேன் என்று சொல்லி சாப்பிட்டு வந்தேன்.
அவர் பெயர் முருகானந்தம்- ஊரில் டிப்ளோமா படித்துவிட்டு கூலி வேலைக்கு வந்துவிட்டார்.கேட்கவே கொடுமையாக இருந்தது ஆனால் வேலை அறிவு அவ்வளவாக இல்லாமல் இருந்ததால் அவரை சிறிது சுலபமான சர்வே வேலைக்கு மாற்றிவிட்டோம்.

இந்த சைட்டில் வேலை எல்லா கட்டுமான வேலை போல் இருந்தாலும் ஒரே ஒரு வேலையை பற்றி சொல்லவேண்டும்.இந்த வேலையை விளக்கவேண்டும் ஆனால் கொஞ்சம் டெக்னிகலாக இருக்கும்.எனக்கு சொல்லத்தெரிந்த வரை சொல்கிறேன்.

அந்த வேலை தான் "Post/Pre Tensioning".இந்த நுட்பம் பெரிய பெரிய கட்டுமானத்துறை பிராஜக்டில் உபயோகப்படுத்துவார்கள்.ஆதாவது ஒரு பீமின் முட்டுகள் (சப்போர்ட்) அதிக இடைவெளியில் இருக்கும் பட்சத்தில் அதன் Bending Moment ஐ தாங்க நிறைய கம்பிகள் போடவேண்டியிருக்கும் அதோடு பீமின் அளவும் அதிகமாகவும் இருக்கும்.இதை மட்டுப்படுத்த ஏற்பட்ட தொழிற்நுட்பம் தான் இந்த முறை.




இந்த நுட்பப்படி பீமுக்கு ஒரளவுக்கு கம்பி போட்டு விட்டு பீமின் கீழும்/மேலும் கீழே வருமாறு ஒரு ஸ்டீல் பைப் போட்டு அதன் உள்ளே மெல்லிய கம்பிகளை போட்டு பீமின் இருபக்கமும் அந்த கம்பி வெளியில் நீட்டிக்கொண்டு இருக்குமாறு செய்துவிடுவார்கள்.

அந்த பீமின் கான்கிரீட் முடிந்து ஓரளவு இறுகியவுடன் ஒரு பக்கத்தில் Cone போன்ற அமைப்புடன் கூடிய தடுப்பான் மூலம் அந்த கேபிளை பிடித்துவைத்து அடுத்த முனையில் Jack மூலம் கேபிளை இழுத்து இந்த முனையையும் பிடித்துவைத்துவிடுவார்கள்.அதன் பிறகு இந்த கேபிளை கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.அதன் படம் கீழே



இதன் குறுக்கு வெட்டு தோற்றம் இப்படி இருக்கும்.



இதே முறையை சிலாபுக்கும் இங்கு உபயோகிக்கிறார்கள்.இதில் பல அனுகூலங்கள் இருப்பதால் பல மாடிகட்டிடங்களில் இதன் தேவை அத்தியவசமாகி வருகிறது.

இன்னும் வரும்...