Friday, May 18, 2007

Air India- Express

எப்போதும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு போக எல்லா விமான நிறுவனங்களிலும் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.

சீஸன்களில் ஒரு விலையும் மற்ற சமயங்களில் வேறு மாதிரி இருக்கும்.எது எப்படி இருந்தாலும் 500 வெள்ளிக்கு கீழே இருக்காது.சுமார் 12 வருடங்களில் மிகக்குறைவாக போன கட்டணம் 565,அதிகமாக 1080 வெள்ளி.இந்த முறை 500 வெள்ளிக்கு கீழே கிடைத்த பயணத்தைப் ப்ற்றி பார்ப்போமா?

கிட்டத்தட்ட அதே தூரம்,ஆனால் சிங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த்துக்கு போக சுமார் 400 வெள்ளி தான்.

இப்படிப்பட்ட நிலைமையில் Air India சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மலிவு விலையில் இங்கிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது.மலிவு விலை என்பதால் சாப்பாடு இருக்காது,தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம்,ஆனால் அப்படியில்லை.



இணையத்தில் இதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று தேடிய போது பலரின் குமுறல்கள் சவுதி பக்கத்தில் இருந்து வந்தது.இருந்தும் நான் சென்னை போவதை முடிவு செய்ததும்,சரி இந்த முறை எப்படி உள்ளது என்று பார்க்கலாம் என்று இவர்கள் இணைய பக்கத்துக்கு போனேன்.

அதற்கு முன்னால் சில Airlines யில் அவர்கள் கட்டணத்தை விஜாரித்த போது இவர்கள் கட்டணம் தான் மிகவும் குறைவாக இருந்தது.

Indian Airlines- $635
Singapore Airlines-$965.

AirIndia Express வலைப்பக்கம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது,கடன் பற்று அட்டை மூலம் காசு செலுத்தி நன்னுடைய பயணச்சீட்டை அப்போதே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
முடிவு செய்த பிறகு,தேதிகளை மாற்றினால் அதற்கு தனியாக பணம் கட்டவேண்டும்.



பயண தேதி வந்தது,சிங்கை விமானநிலையத்தில் பெட்டிகளை எடைப்போட்டு பயணசீட்டு வாங்கும் இடத்துக்கு போய் பெட்டியை வைத்தவுடன் "முதலில் கைப்பையை வையுங்கள்" என்றார்கள். குழப்பத்துடன் வைத்தவுடன் அது 7 கிலோக்கு மேல் போகாமல் இருப்பதை கண்காணித்தவுடன் அதற்கு ஒரு Tag போட்டு அதில் எடையையும் எழுதி தொங்கவிட்டு விடுகிறார்கள்.இதை மறுபடியும்,குடியேற்றத்துக்குள் நுழையும் போதும் எடைபோட்டு சரி பார்க்கிறார்கள்.இந்த மாதிரி சோதனை இந்த விமானச்சேவைக்கு மட்டுமா? எல்லாவற்றுக்குமா என்று தெரியவில்லை.

குடியேற்றப் பகுதி முடிந்த பிறகு சரக்கு ஐட்டம் மற்றும் சிகரெட்டுக்கு எடை பார்பதில்லை.யோசியுங்கள் ஏன் என்று.:-))

அன்று விமானம் கொஞ்சம் தாமதமாக கிளம்பி சுமார் 20 நிமிடங்களுக்கு வாடகை ஊர்தியில் போவது போல் விமான நிலையத்துள் சுற்றி (டெர்மினல் 2,3 என்று) விட்டு கிளப்பினார்கள்.மலிவு விலை விமானச்சேவை என்பதால் எல்லாமே தூரத்தில் இருக்கும் போல,இது சென்னையில் இறங்கும் போதும் அப்பட்டமாக தெரிந்தது.

பயணத்தின் போது எல்லோருக்கும் சைவ சாப்பாட்டு தான். தட்டை,முருக்கு கூட இருந்தது.என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் சென்னையில் ஒரு வீடு Registration விஷயமாக போவதாக சொன்னார்.நீங்களும் வீடு விஷயமாக போகிறீர்களா? என்றார்.புன்சிரிப்புடன் இல்லை என்றேன். அவர் IT யில் வேலை பார்பதாக சொன்னார்,நம்பும்படி இல்லை.வலைப்பூ & தமிழ்மணம் பற்றி தெரியுமா? என்று கேட்டேன், தெரியாது என்றார். அதன் பிறகு பொது வான விஷயங்களை மட்டும் பகிர்ந்துகொண்டோம்.
இடது பக்கம் உள்ளவர் மெத்த படித்தவர் போலும் ஒரு "ஹாய்" என்று முடித்துக்கொண்டுவிட்டார்.

கிளம்பும் போது ஆன தமாதம் இறங்கும் போது எதிரொளித்தது.விமானத்தை விட்டு இறங்கியதும் தரையில் நடந்து காத்திருக்கும் ஒரு பேருந்தில் ஏறினோம் சுமார் 100 மீட்டர் ஓடி ஒரு கட்டிடத்தின் முகப்பில் இறக்கிவிட்டார்கள்.கிழே இருந்து சுழல் மாடிப்படிகள்(படிகள் கிடையாது) மூலம் 4 மாடி ஏறி மற்ற விமானத்தில் இருந்து வெளியேறும் பாதைக்கு திரும்பி வந்து எஸ்கலேட்டர் மூலம் குடிநுழைவு பகுதிக்கு வந்தோம்.பாவம் வயதானவர்கள் எப்படித்தான் 4 மாடி ஏறி வருவார்களோ!!

இந்த தடவை கொண்டு போன ஒரே பெட்டி கொஞ்சம் சீக்கிரம் வந்ததால்,எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.இம்முறையும் நான் வருவது இங்கு யாருக்கும் தெரியாததால் நேரே முன்பதிவு Taxi இருக்கும் இடத்துக்கு போய் போக வேண்டிய இடத்தை சொன்னவுடன் ரூபாய் 300 என்றார்கள்.

என்ன போன தடவை வந்த போது 260 ரூபாய் தானே எதற்கு 40 ரூபாய் அதிகம் என்றேன்.விலை எல்லாம் கூடிவிட்டது என்று பதில் வந்தது.
பணத்தை கட்டியவுடன் ரசீதுடன் ஒரு ஆள் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டி இருக்கும் இடத்துக்கு வந்தான்.

பார்த்தால் ஒரு வண்டி கூட இல்லை.(எதற்கு தான் வலிய வலிய கூப்பிடுகிறார்களோ?)
ஒரு மீன் பாடி வண்டியை காண்பித்து வேண்டுமென்றால் இதில் போங்கள் என்றார்.வந்த கோபத்துக்கு கொஞ்சம் திட்டிவிட்டு பணத்தை திருப்பிக்கொடு என்று சொல்லி பெற்றுக்கொண்டேன்.

கொஞ்ச நேரம் வெளியில் வண்டி கிடைக்குமா என்று பார்த்து கிடைக்காததால் மனைவிக்கு தொலைபேசி வண்டி அனுப்பமுடியுமா? என்று பார்க்கச்சொன்னேன்.பல கால் டேக்ஸிகளும் அப்படி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அப்படியே ஒரு உபாயத்தை சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.ஆதாவது "வருகை" இடத்தில் இருந்து அப்படியே பொடி நடையாக நடந்து "கிளம்பும்" பகுதிக்கு போனால் இறக்கிவிட்டு செல்லும் வாடகை வண்டியை பிடித்துக்கொள்ளலாம் என்று.

அப்படியே நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டோ என்னை பார்த்த படியே கொஞ்ச தூரத்தில் போய் நின்றது.கிட்டத்தில் போய் போக வேண்டிய இடத்தை சொன்னவுடன் ரூபாய் 200 ஆகும் என்றார். சரி என்றவுடன் பெரிய டாக்ஸி ஓட்டுவது மாதிரி ஆட்டோவை ஓட்டி சுமார் 30 நிமிடங்களுக்கும் வீட்டில் இறக்கிவிட்டார்.

No comments: