Sunday, October 26, 2008

டையபரம் வால் (சுற்றுச்சுவர்)

ஒரு கட்டிடம் அதுவும் தரைக்கு கீழே 5 மாடி அளவுக்கு போனால் இது மாதிரி சுற்றுச்சுவர் எழுப்பவேண்டியது அவசியமாகிறது,அதுவும் பாலைவன மணல் இருக்கும் இடத்தில் இது கட்டாயம்.

அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

சுமார் 18 மீட்டர் ஆழத்தில் தான் அஸ்திவாரம் அமையப்போகிறது என்று தெரிந்தவுடன்,மண் தண்மையை பொறுத்து எவ்வளவு ஆழத்துக்கு இந்த சுற்றுச்சுவர் வேண்டும் அதன் அகலம் எவ்வளவு இருக்கவேண்டும் என்று பொறியாளர்கள் முடிவு செய்வார்கள்.இந்த சுவரை சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கு முதலில் தற்காலிக சுவர் சுமார் 1.50 மீட்டர் உயரத்துக்கு எழுப்புவார்கள்.இதனுள் தான் மண் தோண்டும் இயந்திரம் இறங்கி வேலை செய்யும்.எளிதாக சொல்வதென்றால் Guide Wall என்பார்கள்.

இது மண் தோண்டும் முதல்கட்ட வேலை.



சுற்றுச்சுவர் மண்தோண்டும் வேலை ஆரம்பிக்கிறது.



சுவருக்கான கம்பி இறக்கும் பணி



சுவரின் நீளம் அதிகம் என்பதால் இந்த பணி முடிந்ததும் பக்கத்திலேயே ஆரம்பிக்க மாட்டார்கள்,சில மீட்டர் விட்டு மீண்டும் தோண்டுவார்கள்.



ஆமாம் இந்த மாதிரி தோண்டும் கீழே மணல்/மண் சரியாதா என்று தோன்றினால் உங்கள் எண்ணம் சரி தான்.நிச்சயம் சரியும் அதை ஓரளவுக்கு கட்டுப்படுத்த பெப்டோனைட் எனப்படும் கலவையை தண்ணீருடன் கலந்து இயந்திரத்தின் உதவியுடன் தோண்டுவார்கள்.இந்த பென்டோனைட் மண் சரிவை ஓரளவு கட்டுப்படுத்துவதுடன் மணலை கொஞ்சம் இறுகப்படுத்தும்.

கீழே கொடுத்துள்ள இயந்திரம் இந்த வேலையை செய்யப்பயண்படுத்தப்படுகிறது.



இதன் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் சுழல சுழல மண் மற்றும் பாறைகளை உடைத்து தண்ணீருடன் கலந்து இருக்கும் இடத்தில் இருந்து மேலே உள்ள தொட்டிக்கு ஏற்றிவிடும்.



இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குவதை பார்க்கலாம்.



கம்பி இறக்குவதை கீழுள்ள படங்களில் பாருங்கள்.கொஞ்சம் உண்ணிப்பாக பார்த்தால் இது தூக்கப்படும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை காணலாம்.





ஒரு பாகம் முடிந்து நம்மாள் வெளியே வருகிறார்.சுவர் இருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காணலாம்.


ஒரு சுவர் 6~7 மீட்டர் நீளத்துக்கு போட்டபிறகு,சுமார் 20 மீட்டர் தள்ளி அடுத்த சுவர் போட மேல் சொன்னமாதிரி ஆரம்பிப்பார்கள்.இந்த சுழற்சியை கீழ்கண்ட படங்கள் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த சுவருக்கு கான்கிரீட் போடும் முறை...கீழே
இரண்டு பக்கமும் கான்கிரிட் இருக்கும் போதும் இந்த இயந்திரம் மண் தோண்டமுடியும்.


தோண்டியதும் மறுபடியும் கம்பி இறக்குதல்
கான்கிரீட் போடப்படுகிறது

இப்போது முழு சுவரும் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மண் தோண்டப்பட்டு கட்டிடம் வெளிவரும்.

18 மீட்டர் உயரம் உள்ள சுவருக்கு முட்டு வேண்டாமா?
வேண்டும் அது செய்யும் போது சொல்கிறேன்.இதை இங்கு வேறுவிதமாக செய்கிறார்கள்.

Sunday, October 19, 2008

படங்கள்

துபாயில் அவ்வப்போது நண்பர்கள் மூலம் வெளியில் போகும் போது எடுத்த படங்கள் சில கீழே..

கோல்ட் சோக் பக்கம் பொழுது போகாமல் சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த கார் நடைப்பாதை மேல் ஏற்றியிருந்தது வித்தியாசமாக இருந்தது ஆனால் இப்போது பழக்கமாகிவிட்டது.வண்டி நிறுத்த இடமில்லாததால் ஏற்றிவிடுகிறார்கள்.



நடைப்பாதை மேம்பாலத்தில் இருந்து எடுத்தது.இப்படி போக்குவரத்து இருக்கவேன்டும் என்று பிரம்பபிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.



ஐகியா கடைத்தொகுதியின் நுழைவாயிலில் உள்ள அலங்கார விளக்குகள்.



மறுபகுதி.



பாம் ஜுமாரியா போன போது கடலை தூர்ந்தெடுத்து பல விடுதிகளை அமைத்துள்ளார்கள்.ஐரோப்பியா உள்ள மாதிரி வடிவமைத்து வீடு கட்டி/கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.வீடு ஒவ்வொன்றும் மில்லியனுக்கு மேல் போகுதாம்.



இந்த கடலில் விரைவுப் படகு சேவை நடந்துகொண்டிருக்கிறது.

Wednesday, October 15, 2008

பாலைவனத்தடங்கள்

இங்கு வந்த சில நாட்கள் கழித்து வேலைசெய்யும் இடத்துக்கு காலை 8 மணிக்கு போகும் போது ஓரிடத்தில் இந்த தடங்களை பார்த்தேன்.

என்ன தான் பாலைவனமாக இருந்தாலும் இங்கும் பலவிதப்பட்ட பறவைகளும் மிருகங்களும் வாழுகின்றன அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ முற்படுகின்றன.

ஆச்சரியமான இயற்கை!!

விஜயதசமி

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த நிலையம் குழந்தைகள் பலருக்கும் கலை சார்ந்த பலவற்றை கற்றுக்கொடுத்து வாழவைத்து வருகிறார்கள்.

விஜயதசமி அன்று மாலை அங்கு வருமாறு அழைந்த உறவினர் அங்கு கச்சேரி நடக்கும் என்று சொல்லவில்லை,சொல்லியிருந்தால் அந்த பக்கமே போயிருக்கமாட்டேன்.எனக்கும் கர்நாடக சங்கீததுக்கும் ரொம்ப தூரம்.

இடத்தை கண்டுபிடித்து கதவை திறந்த போது வந்த வயலின் சத்தம் என் காதையே துளைப்போட்டு விடும் போல் இருந்தது.எப்படி இவ்வளவு சத்தமாக வைத்து ஒரு சிறிய அறையில் 25 பேர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வியந்தேன்.

சில நொடிகளிலேயே நெளிய ஆரம்பித்துவிட்டேன் இருந்தும் படத்தில் இருக்கும் பெண்ணை உற்சாகப்படுத்த சிறிது நேரம் உட்காந்துவிட்டு வந்தேன்.


Thursday, October 9, 2008

புர்ஜ் துபாய் கோபுரம்

இங்கு(துபாய்) வந்த கொஞ்ச நாள் வரை இந்த கோபுரம் எங்கு இருக்கிறது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வேலை முடிந்து சைட்டைவிட்டு வெளியேறும் நேரத்தில் எதேச்சையாக திரும்பிய போது மங்கலாக ஏதோ தெரிந்தது.நடந்து பஸ் நிறுத்தம் போனபிறகு சற்று சூரியன் கீழிறங்கியவுடன் அந்த கோபுரத்தின் மேல் நிற்கும் பாரம் தூக்கியும் தெரிந்தது.இது தான் இப்போதைக்கு உலகத்திலேயே உயரமான கோபுரம் (600 மீட்டருக்கு மேல்).

பகல் முழுவதும் ஒரு மாதிரியான மணல் காற்று வீசிக்கொண்டு இருப்பதால் தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சரியாக தெரிவதில்லை.

கீழே உள்ள படம் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து எடுத்தது...உங்கள் பார்வைக்காக.



இந்த ஊரைவிட்டு கிளம்பும் முன்பு இதன் மேல் ஒரு தடவையாவது ஏறிவிடவேண்டும்.