Wednesday, June 18, 2008

பிக்பாக்கெட்டா? தொலைந்ததா?

அடையாள அட்டை தொலந்து இரண்டு வாரம் ஆகியும் எந்த விபரமும் கிடைக்காததால், போலீஸ் ரிப்போர்ட்டுடன் குடிநுழைவுத்துறைக்கு போனேன்.வரிசை பிடித்து நின்றேன்,இப்படி நிற்க ஆரம்பிக்கும் போதே ஒரு ஒழுங்கு முறை ஆரம்பமாகிவிடுகிறது,யாரும் யாரையும் மோதுவதில்லை அடுத்தவரை கள்ளத்தனமாக முந்திக்கொண்டு போவதில்லை.நம்மவர்கள் இருந்தால் நம் தோளுக்கு மேல் ஒரு வாட்டியாவது எட்டிப்பார்காமல் இருக்கமாட்டார்கள்,அப்படி என்ன அவதியோ! இது சாப்பாட்டுக்கடை வரிசையில் நடக்கும்.கோமளவிலாசுக்கு போனால் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

என் முறை வந்தது,போலீஸ் கடிதத்தை கொடுத்ததும்அந்த அதிகாரி ஒரு கேள்வி கேட்டார்,யாராவது விபரமானவங்க பதில் சொல்லுங்கள்...

திடிரென்று சாப்பிட போன இடத்தில் என் அடையாள அட்டை காணாமல் போய்விட்டது,இதை எப்படி வகைப்படுத்துவது?

காணாமல் போனதாகவா? அல்லது பிக்பாக்கெட் யில் இழந்ததாகவா?

பிக்பாக்கெட் என்றால் எனக்கு அரை குறையாக தெரியும் என்று எதிர்பார்க்கிறார்களா?

இதைத்தான் அந்த அதிகாரி என்னிடமும் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு காணாமல் போனது தான் தெரியும் அதை எப்படி பிக்பாக்கெட் என்று வகைப்படுத்தமுடியும் என்று?அவர்களுக்கு சொல்லி கொடுத்துள்ளதில் இது இரண்டைத்தவிர வேறு இல்லாத்தால் அந்த அதிகாரியால் எதுவும் சொல்லமுடியவில்லை.நீங்கள் தான் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லனும் என்றார். எனக்கு இருந்த அவசரத்தில்"காணாமல்" தான் போனது என்றேன்.

அப்படியென்றால் 100 வெள்ளி கட்டிவிட்டு இரண்டு வாரம் கழித்து அடையாள அட்டையை எடுத்துச்செல்லுங்கள் என்றார்.பணத்தை கட்டி வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது.

காணாமல் போனது என்றால்- என்னுடைய தவறு - அதற்கு 100 வெள்ளி தெண்டம்

பிக்பாக்கெட் என்றால் - என் தவறு இல்லை -- அதற்கு 50 வெள்ளி தெண்டம்.

என்ன செய்வது எல்லாவற்றையும் பட்டு தான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அடையாள அட்டை தொலந்தால் என்னென்ன பிரச்சனை வரும் பார்ப்போமா?

1.கள்ளக்குடியேறி உபயோகிக்க பயன்படுத்தலாம். (நல்ல வேளை இது என் அட்டையில் நடக்கவில்லை)

2.உங்கள் அட்டையை வைத்து கள்ள வட்டிக்கும்பலிடம் கடன் வாங்கலாம்.

3. இருக்கும் எல்லா தொலைபேசி நிறுவனத்திலும் கணக்கு ஆரம்பித்து புது தொலைப்பேசி/ அந்த மாதத்தில் பேசப்படும் அழைப்புகளுடன் கம்பிநீட்டலாம். தலைப்பேசி நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத்துறையும் இந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதில்லை.இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்.தகவல்கள் கை மாறி மாறி நம் தகவல்கள் எங்கெல்லாம் போய் நிற்கும் என்று தெரியாது பாருங்கள்.

4.எனக்கு தெரியாம இன்னும் பல வழிகள் இருக்கலாம்....

இதில் எங்கெங்கு மாட்டிக்கொண்டேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, June 1, 2008

Lau Pa Sat



மேலே உள்ள படம் தான் லாவ் ப சாட் என்கிற இடம்.இதனுள் பல உணவு அங்காடிகள் உள்ளது.இதன் முந்தைய வரலாறு சிங்கப்பூருடன் தொடர்புடையதால் வெளி அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்.இந்த பகுதி மத்திய வட்டார இடத்தில் உள்ளதால் பல நாட்டுக்காரர்களும் உபயோகப்படுத்தும் விதமாக விதம் விதமான சாப்பாடுகள் கிடைக்கும்.விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

வரலாற்றுப் பின்னனியில் இருக்கும் இக்கட்டிடம் என்னுடைய வாழ்விலும் வரலாறு படித்தது அதை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் கட்ட இருந்த கட்டிடம் Exchange Centre என்று இப்போது அழைக்கப்படுகிற கட்டிடம் ஆகும்.எங்கள் வேலை 3வது மாடியில் இருந்து ஆரம்பிக்கும் என்பதால் கட்டிடம் தரையில் இருந்து எழும்பிய பிறகே போனோம்.Capital Tower யில் செய்த பணி போலவே இதுவும் அதனால் வேலை வித்தியாசம் அவ்வளவாக இல்லை.என்ன! இப்போது குத்தகைகாரர் மாதிரி வேலை பார்க்கனும் என்பதால் ஆட்களை வேலை வாங்குவதும் சில ரக இயந்திரங்களை ஓட்டவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.ஒவ்வொரு நாள் தேவைக்கும் வேண்டிய சகலமானவற்றையும் பார்த்துக்கொள்வதும் நம் கையில் விழுந்தது.எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் சில நாட்கள் சாப்பிட மட்டுமே வேலைக்கு வருவது போல் தோன்றியது.
சில நாட்களுக்கு காலை அலுவலகம் வந்த 20 நிமிடத்திலேயே கண்ணை கட்ட ஆரம்பித்துவிடும்.குளிர்சாதனம் பிரச்சனையும் இதில் உதவியது.அப்போதே முடிவு செய்தேன் இந்த நிறுவனத்தை விட்டு விட வேண்டும் என்று.அதோடு அப்போது அந்நிறுவனத்திலும் உள் பிரச்சனைகள் கட்டுக்கு அடங்காமல் போய்கொண்டிருந்தது என்று காற்று வாக்கில் வரத்தொடங்கியது.

சிங்கையில் வேலை நிலவரம் மேம்படும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்தேன்,அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறி கட்டுமானத்துறையில் தெரியவில்லை.



இரண்டு பிலாக்குகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் எங்கள் வேலை,அதோடில்லாமல் மேலே சரிவாக இருக்கும் பகுதியும் ஸ்டீலால் ஆனதும் எங்கள் வேலை.இதில் வலது பக்கம் இருக்கும் கூரையில் வேலை ஆரம்பிக்கும் வரை தான் நான் இங்கு இருந்தேன்.

மேலும் சில படங்கள் கீழே...





இப்படி அப்படி என்று 8 மாதங்கள் ஓடி ஒரு நேர்காணலுக்கும் அழைப்பு வரவில்லை.வரும் விளம்பரங்களில் பலவற்றில் உள்ளூர்காரர் வேண்டும் என்றோ அல்லது இரு மொழி (சீனம் & ஆங்கிலம்) பேசும் ஆட்கள் மட்டுமே தேவை என்று வந்துகொண்டிருந்தது.சனிக்கிழமை வரும் செய்திதாளில் வரும் விளம்பரங்கள் குறைந்து சில பக்கங்களே வந்தது.அதை வைத்தே சிங்கையில் வேலை நிலவரம் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். :-)

இப்படி போய்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் பக்கத்தில் உள்ள லா ப சாட்டில் சாப்பிட போனேன்.உணவு ஆர்டர் செய்யும் போது பையில் கையைவிட்டா....! என்னுடைய அடையாள அட்டையுடன் வங்கி அட்டை இருக்கும் சின்ன பை காணாமல் போயிருந்தது. ஷாக் அடித்தது போல் இருந்தது.எங்கு தொலைத்தேன் என்று தெரியவில்லை.அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தேனா? அல்லது இங்கு பிக்பாக்கெட்டிடம் இழந்தேனா? என்று தெரியாத குழப்பத்தில்,முதலில் செய்தது வங்கி அட்டையை முடங்கச்செய்ய தொலைபேசியது தான்.

பல இடங்களிலும் கிடைக்காததால் அன்று சாயங்காலம் காவல்துறை போஸ்ட்க்கு சென்று ரிப்போர்ட் செய்தேன்.அவர்களோ இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கச்சொன்னார்.யாராவது எடுத்திருந்தால் ரிப்போர்ட் செய்ய அவசியம் இல்லாமல் போகக்கூடும் என்பதால்.ஒரு வாரம் வரை எந்த விதமான விபரமும் கிடைக்காததால் திரும்ப அவர்களிடம் போய் ஒரு ரிப்போர்ட் வாங்கி வந்தேன்,அதை வைத்து தான் வேறு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கு வேறு தெண்டம் அழனும்.

இன்னும் வரும்...