Wednesday, May 9, 2007

ஒற்றைத் தலைவலி

ஒற்றை தலை வலிக்கு பல பேர் மருந்து சாப்பிடுகிறார்கள்,சிலர் அனுபவித்து கழிக்கிறார்கள்.
இங்கு பாருங்கள் திரு கோபி தன் பாட்டி சொன்ன வைத்தியத்தை "என்றென்றும் அன்புடன் பாலா" வின் பதிவில் போட்டிருந்தார்.
அவதிப்படுபவர்கள் முயற்சித்து பார்க்கலாமே!!
என்ன 3 மணிக்கு (காலை) எழுத்துக்கச்சொல்கிறார் பிறகு தூங்கச்சொல்கிறார்.இதற்கு பயந்தே தலைவலி போனாலும் போகலாம். :-))
நன்றி கோபி.

பாலா,

உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்.

//முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத் தலைவலி படுத்தியபோதும்//

சிறுவயதில் எனக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தது. எங்கள் பாட்டி சொன்ன வைத்தியம் செய்ததில் குணமானது.

அந்த மருத்துவம்:

அதிகாலை 3 மணிக்கு எழுந்து நல்லெண்ணெய்(எள் எண்ணெய்) உடன் கொஞ்சம் சுக்கு நசுக்கி இட்டு சூடு செய்யவும். சுக்கு நன்றாக பொரிந்தபின் கீழே இறக்கி ஆறவைத்து கை பொறுக்கும் சூட்டில் தொட்டு தலையில் தடவவும். பிறகு சூடான தண்ணீரில் குளித்து/ தலை உலர்த்திவிட்டு வந்து கால் மணி நேரத்திற்கு பிறகு (முன்னிரவில் வைத்த) ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்கச் செல்லுங்கள். பின் வழக்கம் போல காலை எழுந்து உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது போல 2-3 முறை செய்தால் ஒற்றைத் தலைவலை விலகும்.

இந்த மருத்துவம் கேட்பதற்கு நகைப்பாய் இருக்கும். சுக்கு/எள்ளெண்ணெய் தவிர மருத்துவ குணமுள்ள ஏதும் இதில் இல்லை தான். ஒரு வேளை அதிகாலை நேரம், பழைய ரசம் சாதத்தில் ஊறிய மருத்துவ குணமுல்ல சில மசாலா பொருட்கள் இதெல்லாம் காரணமா எனத் தெரியாது. எனக்கு குணமானது. உங்களுக்கும் குணமாகலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். முயன்று பார்க்கலாமே.

No comments: