Thursday, November 27, 2008

சரிவு- இது கான்கிரீட்டில்

இப்ப உலகம் முழுவதும் நிதிநெருக்கடியால் பல வேலை இழப்புகள்,கம்பெனிகள் மூடல் அது இது என்று சரிவுகளின் ராஜ்யமாக இருக்கு, ஆனால் நான் சொல்லப்போவது கான்கிரீட்டில் சரிவு.

பெரிய பெரிய வேலைகளில் தினமும் கான்கிரீட் வந்துகொண்டிருக்கும் இதெல்லாம் பெரிய பிளான்டுகள் மூலம் போட்டு மிக்ஸ் செய்திருந்தாலும் போடும் இடத்துக்கு வரும் போது அது சரியான நிலையில் தான் இருக்கா என்று பார்க்க ஒரு சின்ன சோதனை இருக்கு,அதுக்கு பேரு சரிவுச்சோதனை (SLUMP TEST)

அதை எப்படி செய்கிறார்கள் என்பதை என்னுடைய தொலைப்பேசி மூலம் எடுத்து ஏற்றிருக்கிறேன் அதனால் தரம் ஓரளவே இருக்கும் என்று நினைக்கிறேன்.



முதலில் அந்த கோனை வைத்து அதனை மூன்று முறையில் நிரப்பவேண்டும்,ஒவ்வொரு முறையும் அந்த கம்பி(16 மி.மீட்டர் விட்டம்) யால் 24 முறை குத்த வேண்டும்.முடிந்த பிறகு மேல்மட்டத்தை சம்மாக வைத்துவிட்டு அந்த கோனை மெதுவாக எடுக்கவேண்டும்.
எடுத்த பிறகு அந்த கம்பியை மேல் வைத்து அதன் கீழ்மட்டத்தில் இருந்து கான்கிரீட்டின் மேல் முனைவரை அளக்கவேண்டும்.இது பொறியாளர் கொடுத்திருக்கும் அளவுக்குள் இருந்தால் கான்கிரீட்டை அனுமதிக்கவேண்டும் இல்லையென்றால் தூக்கிப்போடவேண்டியது தான்.தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் கான்கிரீட் இந்த சோதனையில் தோல்விஅடையும்.

நிரம்ப சொல்வதற்கு இருந்தாலும் போர் அடிக்கும் என்பதால் மேலோட்டமாக சொல்லியுள்ளேன்.

Wednesday, November 26, 2008

கான்கிரீட் குயூப்

போடுகிற கான்கிரீட் பொறியாளர் நிர்ணயம் பண்ண அளவில் தான் இருக்கா என்று கண்டுபிடிக்க கீழே உள்ள நகர் படத்தில் காண்பித்துள்ள மாதிரி சின்ன சின்ன குயூபாக கான்கிரீட் சிலவற்றை போட்டு அதை தண்ணீரில் மூழ்கவைத்து, ஏழாவது நாளிலும் இருபத்தியெட்டாவது நாளிலும் சோதனை செய்வார்கள்.இந்த சோதனைக்கு குயூப் அழுத்தச்சோதனை என்று பெயர்.



ஏழாவது நாளில் செய்யப்படும் சோதனையில் அதன் நிர்ணயப்பட்ட அளவில் சுமார் 80 விழுக்காடு இருக்கனும்.28 நாட்களில் அதன் தர நிர்ணய அளவை அடைந்துவிடவேண்டும்.பொதுவாக 7 நாளிலேயே 28 நாள் அளவை அடைந்துவிடும்.

இந்த குயூபின் அளவு 150x150x150 மி.மீட்டர்.இதனுள், வண்டியில் வரும் கான்கிரீட்டில் இருந்து கொஞ்சம் எடுத்து சிறிது சிறிதாக போட்டு அதற்கென்று உள்ள கம்பியால் குத்தி பிறகு சமப்படுத்துவார்கள்.இது போட்டு முடிந்த பிறகு 24 மணி நேரம் கழித்து பிரித்து எடுத்து தண்ணீரில் ஊற வைப்பார்கள்.



பட உதவி: இணையம்.

சிறிய வீடுகளில் போடப்படும் கான்கிரீட் அளவு குறைவு என்பதால் இப்படிப்பட்ட சோதனைகள் செய்வதில்லை.தரமான கான்கிரீட்தானா என்பதை நிர்ணயம் செய்துகொள்ள இது தான் முதற்படி.

Tuesday, November 11, 2008

துபாய் சித்தாள்

இது தான் துபாய் சித்தாள். :-)
இங்கு, அதுவும் கட்டுமானத்துறை வேலையிடங்களில் சித்தாள் அல்லது உதவியாளர் வேலையில் சித்தாள் என்பவரை பார்க்கவே முடியாது.சிங்கையில் வேலைசெய்யும் இடங்களில் அபூர்வமாக ஓரிருவரையாவது இந்த நிலையில் பார்க்கமுடியும்.
இந்த குறையை சாதனங்கள் மூலம் சரி செய்துக்கொள்கிறார்கள்.நான் தினமும் வரும் வழியில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வேலையிடத்தில் இந்த சாதனத்தை பார்த்தேன்.இதன் மூலம் சிமின்ட்/மணல் முதலியவற்றை தரையில் இருந்து வேலையிடத்துக்கு தூக்கிச்செல்ல இது உதவுகிறது.மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டர் மூலம் இந்த வேலையை செய்யமுடிகிறது.




அருகில்






எளிமையான டிசைன் மற்றும் துரிதமாக மாட்டி/கழற்றக்கூடிய முறை என்றபட்சத்தில் இது ஒரு வரப்பிரசாதம் போலவே தோன்றுகிறது.இதன் மூலம் டவர் கிரேனோ அல்லது வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் பிளாட்பாரமோ தேவையில்லாமல் போகிறது.

Thursday, November 6, 2008

MTR- உடனே சாப்பிடலாம்

நீங்க பிரம்மச்சாரியா அதுவும் துபாயில் ஒரு மூலையில் வேலையா?மதிய சாப்பாடு கையில் எடுத்துப்போகமுடியாத நிலையா? இப்படியெல்லாம் இருந்தா இது தான் சரியான சாப்பாடுக்கான வழி- எனக்கு தெரிந்தவரை.
சிஙகையில் இருந்த போது எப்போதாவது என் சமையல் மீதே எனக்கு வெறுப்பு வரும் போது இதைத்தான் நான் பெரிதும் நாடினேன்.


நன்றி:பிகேபி
இங்கு வந்ததும் முதலில் தேடியதும் இதைத்தான் ஆனால் கிடைக்கவேயில்லை.
எல்லாம் கிடைக்கும் நம்ம பிகேபி குழுமத்தில் இதைக்கேட்ட போது அங்கு வந்த திரு ஆசாத் அது கிடைக்கும் இடங்களை பட்டியலிட்டிருந்தார்,அதில் ஓரிடம் நான் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் அது கிடைக்கவில்லை.



இப்படியே அலைந்துகொண்டிருக்கும் போது கராமா என்ற இடத்தில் நம் தேவைக்கு ஏற்ற மாதிரி அறை எதுவும் கிடைக்குமா? என்று பார்க்க சுற்றிக்கொண்டிருக்கும் போது ஏதேச்சையாக இந்த கடைக்குள் நுழைந்தேன்.அப்படியே சுற்றிய போது நான் தேடிய எம்.டி.ஆரின் பலவகை "உடனடியாக" சாப்பிடலாம் வகை உணவுகள் கிடைத்தது.

உங்களுக்கும் தேவைப்பட்டால் இங்கு போய் வாங்கிக்கொள்ளலாம்.என்னதான் சமயத்துக்கு உடனடியாக சாப்பிடலாம் என்றாலும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.

Sunday, November 2, 2008

தண்ணீர் உறிஞ்சி

கட்டுமானம் கடலுக்கு பக்கத்திலா அல்லது தண்ணீர் மட்டம் தரைக்கு அருகில் இருக்கிறதா? இந்த மாதிரி நிலைமையில் அஸ்திவாரம் போடவேண்டும் என்றால் அதுவும் 3 அல்லது 4 மாடி கீழேயே இருக்கும் நிலைவந்தால் இதைவிட சிறந்த முறை இதுவரை நான் காண்வில்லை.

இந்த முறையில் தரைக்கு கீழே உள்ள தண்ணீர் மட்டத்தை நாம் வேலை செய்யப்போகும் நிலைக்கு கீழே கொண்டு செல்லமுடியும். எப்படி?வாங்க பார்க்கலாம்.

இதற்கு தேவை சில பிளாஸ்டிக் பைப்புகள்,இணைப்பு பைப்புகள் ஒரு சிறந்த பம்ப்,அவ்வளவு தான்.

செயல்முறை:கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




தண்ணீர் மூலம் நாம் அடையவேண்டிய ஆழத்துக்கு ஒரு துளை போடவேண்டும்.அந்த தண்ணீர் வேகம் இருக்கும் போதே நீலக்கலரில் இருக்கும் பைபையும் சொருகிவிடவேண்டும்.இது மிக எளிதான பணி.பைபை வைத்தவுடன் தண்ணீரை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பைபை சுற்றி சிறிது ஜல்லி(10மி.மீட்டர் அளவு) கொட்டவேண்டும்.

கீழே உள்ள படம் தான் அந்த பிளாஸ்டிக் பைப்பின் மண்ணுக்கு அடியில் இருக்கும் பகுதியை காண்பிக்கிறது.பெரிதாக்கி பாருங்கள் அந்த பைப்பில் 2 மி.மீட்டர் கணத்துக்கு வெட்டிவிட்டிருப்பார்கள்.இது தண்ணீர் அந்த பைப்பினுள் போவதற்கு உண்டான வழியை ஏற்படுத்திக்கொடுக்கிறது.



கீழே உள்ள படம் சில பைப்புகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையை காண்பிக்கிறது.



இப்போது இந்த பைப்புகளை ஒரு பெரிய பைப் மூலம் இணைக்கவேண்டும்.முக்கியமாக வெளிக்காற்று இந்த பெரிய பைப்பினுள் போகக்கூடாது.


இப்போது சிறிய பைப்பை பெரிய பைபுடன் இணைத்துவிட்டார்கள்.


இது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட படம்.


இது தான் காற்று/மற்றும் தண்ணீரை வெளியேற்றும் பம்பு.
வெளிக்காற்று பெரிய பைபினுள் போகாத நிலையில் அந்த பைப்பினுள் உள் இருக்கும் தண்ணீர் தொடந்து வெளியேறிக்கொண்டு இருக்கும்,இதனால் நில நீர்மட்டம் தரை மட்டத்தில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும்.

இதே முறையை நான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காக்கிநாடாவில் பார்த்திருக்கேன்,அப்போது படம் எடுக்கும் கருவியில்லாத்தால் விரிவாக சொல்லமுடியவில்லை .

Saturday, November 1, 2008

மண் தோண்டி

போன பதிவில் சுற்றுச்சுவரை எப்படி எழுப்புவது என்று பார்த்தோம் அதில் உபயோகப்படும் இயந்திரம் மண்ணுக்கு அடியில் எப்படி வேலை செய்யும் என்பதை வெளியில் வைத்து எடுத்த நகர்படம் இங்கே.



இதன் மத்திய பகுதியில் இருந்து பென்டோனைட் தண்ணீர் கலந்து மண்ணை கரைக்கும் பிறகு அதையே வெளியேற்றி அதினிலிருந்து மண்ணை எடுத்து பென்டோனைட் தண்ணீரை மறுபயணீடு செய்வார்கள்.