Friday, November 30, 2007

சிங்கப்பூர் விஜயம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் அந்த குடிநுழைவு அதிகாரி என்னிடம் "நீ எப்போது இங்கு வந்தாய்?"என்று கேட்டவுடன் அதிர்ந்தேன்.

நான் வந்த தேதியை சொன்னதும், எந்த விமானத்தில் வந்தாய்? என்றார்.

நல்ல வேலையாக பழைய போர்டிங் பாஸ் வைத்திருந்ததால் என்னவோ சொல்லிவிட்டு மலேசியாவை விட்டு வெலியேற அனுமத்தித்தார்.இந்த பிரச்சனை என் கடவுச்சீட்டில் மட்டும் தான்,மனைவி & குழந்தை யின் பயணச்சீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை.



ஒரு வழியாக விமானம் சிஙக்ப்பூரை காலை 11 மணிக்கு அடைந்தது. அதற்கு முன்னால்..

இந்த முறை விமானத்தில் ஜன்னல் இருக்கை கிடைத்ததால் சிஙக்ப்பூரில் இறங்குவதற்கு முன்பு விமானம் சுற்றிக்கொண்டு இருந்தது.குட்டி குட்டியாக மணற்திட்டுகள் (தீவுகள்).மழைத்தண்ணிரீல் அடித்துச்செல்லப்படும் காகிதம் போல கப்பல்கள் அங்கங்கு போய்கொண்டு இருந்தது,சில நங்கூரம் இட்டு நின்றுகொண்டிருந்தது.இதற்கிடையில் ஒரு இடத்தில் கடல் ஓரத்தில் ஏதோகட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் ஒரு சின்ன நினைப்பு "நமக்கு இங்கு வேலை கிடைத்தால்.."நன்றாக இருக்குமே என்று.ஒரு சில வினாடிகள் தான் அதற்குப்பிறகு மறந்துவிட்டேன்.

சிங்கை இறங்கி குடிநுழைவு வேலைகள் முடிந்து சாமான்கள் சேகரிக்கும் இடத்துக்கு வந்தோம்.குடிநுழைவு பகுதி உள்ளூர்காரர் மற்றும் நிரந்தரவாச தகுதி உள்ளவர்களுக்கு 2 வரிசையும் மற்றவை வெளிநாட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.சிங்கையில் நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வெளியேறும் வழி வரை தேவையான விபரங்கள் தலைக்கு மேல் இருக்கும்.கீழே குழி எதுவும் திறந்து இருக்கும் என்ற பயம் இல்லாமல் தைரியமாக மேலேயே பார்த்துக்கொண்டு வரலாம்.இங்குள்ள சாமான்கள் வைக்கும் டிராலி கைபிடியை கீழ் நோக்கி அழுத்தினால் தான் நகரும் படி செய்திருப்பார்கள். முதல் முதலில் வரும் பயணிகளுக்கு இது முதலில் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும்,பிறகு பழகிவிடும் அல்லது அங்குள்ளவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

உங்களிடம் தேவைக்கு அதிகமாக சிகரெட்,மதுபானம்,சிக்லெட் மற்றும் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இல்லாத பட்சத்தில் "பச்சை" வழி வெளியே வந்துவிடலாம்.அழைக்க வந்தவர்கள் இல்லாவிட்டால் வாடகை வாகனம் எடுத்து முகவரி சொன்னால் போதும்,கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.



இதெல்லாம் மலேசியாவில் ஓரளவு பழகியிருந்ததால் வாடகை வாகனம் எடுக்கும் முன்பு நான் போகப்போகும் வீட்டுக்கு ஒரு போன் போட்டுடு வழி கேட்போம் என்று தொலைப்பேசினேன்.

எடுத்தவர் குரல் சற்று வயதானவர் போல் இருந்தது,முகமன் கூறிவிட்டு வழி கேட்டேன்.அந்த நாட்டுக்கே உரிய ஸ்லேங்கில் சிலவற்றை சொன்னார்.குறித்துக்கொண்டு டாக்ஸிக்கு வரிசை பிடித்து நின்று ஏறி அட்ரஸ் சொன்னேன்.சேறு இடம் வந்ததும் டாக்ஸி ஓட்டுனருக்கும் அவ்விடம் தெரியவில்லை,சற்று உள்ளடங்கி இருந்தது.அதிக நேர தேடல் இல்லாமல் வந்து இறங்கினோம்.அவ்வீட்டில் உள்ள பெரியவர் வீட்டுக்கு வெளியில் வந்து வரவேற்றார்.மற்றவர்கள் வேலைக்கு போயிருந்ததால் தனியாக இருந்தார்.

மற்றவை வரும் பதிவுகளில்.

Monday, November 19, 2007

பத்துக் கோவா- சில படங்கள்

நாங்கள் கட்டிய பாலத்தின் சில படங்கள் பதிவு எழுதிக்கொண்டு இருக்கும் போதே பதிவேற்ற முடியவில்லை.படங்கள் ஊரில் மாட்டிக்கொண்டுவிட்டதால் அப்போது ஏற்ற முடியவில்லை. சிங்கைக்கு கிளம்பும் அவசரத்தில்,அப்படங்களை நேற்று தான் போட்டோ பக்கெட்டில் ஏற்றினேன். அவை உங்கள் பார்வைக்காக.

கீழே உள்ளது... பைல் உள்ளே கான்கிரீட் போடுவது,பைல் கட் பண்ணுவது மற்றும் பைல் உள்ளே உள்ள தண்ணீரை வெளியே எடுப்பது என்ற பல வேலைகளை காட்டும் படம்.



இதுவும் பைல் பற்றியே..



இது Steel Beams வைத்த பிறகு எடுத்த படம்



பாலம் ஓரளவு முடிவுக்கு வந்தபோது எடுத்தது.Low tide இல் பைலும் அதன் மேல் நிற்கும் Foundation உம் தெரிவதை காணலாம்.



பாலம் திறப்புவிழா காணும் நேரத்தில் அத்தொகுதி அமைச்சர் நடந்து வருகிறார்.வலது கோடியில் நான்.