Wednesday, October 10, 2012

தரம் குறைகிறது.

போன பதிவு.

இப்பதிவை படிப்பதற்கு முன் மேலே உள்ள பதிவை படித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமாக புரியுலாம்.
கட்டுமானத்துறையில் நிகழும் விபத்துகளும் அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளும்,ஆராய்சிகளும் இன்றைய அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.அரசாங்க வேலையில் உள்ள இந்த அனுகுமுறை மறுமுறை இதே மாதிரியான நிகழ்வு நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க உதவும்.

விபத்து நடந்த வேலையை முதலில்  நிறுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது அதன் தொடர்பில் உள்ள வேலைகளும் நிறுத்தப்பட்டது.குத்தகைகாரர்களை வேறு இடங்களுக்கு மாற்றி அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் நிகழ்வுகளை அமைத்துக்கொண்டார்கள்.மனித உயிர் இழப்பு இல்லாதது ஒரு பெரிய பணியை குறைத்தது.

குத்தகைக்காரர் உயரதிகாரிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நிகழ்ந்த சந்திப்பில் விபரம் தெரிவிக்கப்பட்டது.குத்தகைக்காரர் இதன் அத்தனை அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அறிக்கை  கொடுக்கும்படி பணிக்கப்பட்டது.அதே சமயத்தில் தரத்துக்கு பெயர் போன ஒரு அரசாங்க கல்வி நிறுவனத்துக்கு இதனை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்குமாறு பணிக்கப்பட்டது.No stones unturned.

எல்லா விரல்களும் இதன் மூல காரணம் தரமற்ற பற்றவைப்பு அதை கவனிக்க தவறி ஆய்வாளர் பக்கமே திரும்பியது.ஒரு ஆய்வறிக்கை தரமான Design இல்லாததையும் குறிப்பிட்டது.இதையெல்லாம் கவனத்தில்கொண்டு இருக்கும் இரும்பு சட்டத்தை மேம்படுத்தி,தேவைக்கு அதிகமாக முட்டு கொடுத்து, தாங்கும் சட்டத்தை உறுதிப்படுத்தினார்கள்.அதை முறையாக முதன்மை அதிகாரிக்கு சம்ர்பித்த பிறகே தொடர்ந்து வேலை செய்ய முடிந்தது, அதற்குள் 45 நாட்கள் போய்விட்டது.

இந்த 45 நாட்கள் சும்மாகவா இருந்தோம்? இல்லை. விழுந்த கான்கிரீட்டை உடைக்க வேண்டிய வேலையை ஆரம்பித்தோம்.கிட்டத்தட்ட 24 M3 அளவுள்ள கான்கிரீட்டை அந்த உயரத்தில் மனித வளம் மூலமாக உடைப்பது என்பது முடியக்கூடிய வேலை என்றாலும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதால் வேறு தொழிற்நுட்பத்தை நாடினோம்.அது தான் Diamond Cutter. இம்முறையில் கான்கிரீட்டை சும்மா கேக் வெட்டுவது போல் வெட்டி அப்படியே பாலம் பாலமாக கீழே கொண்டுவர வேண்டியது தான்.

செலவு அதிகம் என்றாலும் வேறு வழியில்லாததால் இம்முறையை கையாண்டோம், சில லட்சங்கள் காலியானது.இது குத்தைகைக்காரரின் எதிர்பாராத நஷ்டம்.வேலையாட்களின் தரம் மற்றும் மேற்பார்வையாளரின் தரம் அதோடில்லாமல் அதை உபயோகிப்பவரின் கவனக்குறைவு என்ற பலமுனை தரச்சோதனை தோல்வி அடைந்ததால் நிறுவன பெயருக்கு மேல் ஒரு கரும்புள்ளி விழுந்தது என்பதை மறுக்கமுடியாது.

நிகழ்வுகளின் சில படங்கள் கீழே...

வெல்டிங் விடுபட்ட இடம்.


கான்கிரீட் ஒரு பகுதி, உள்  இருக்கும் கம்பிகளால் விழாமல் இருக்கு.


வெட்டி எடுக்கப்படுகிறது.




வெட்டுப்பட்ட பகுதி.



மற்றொரு பகுதி...



தேவையான முட்டு அதிகரித்த பின்.




இப்படி பல நடவடிக்களை எடுத்த பின் கான்கிரீட் போட்டோம், ந்ல்ல வேளை ஒரு பிரச்சனையில்லாம் முடிந்தது.

இந்தியாவில் இது போல் பல நிகழ்வுகள் தினம் நடந்துகொண்டிருக்கலாம், இதற்கான விடிவு ஒருவரின் கையில் இல்லை. பல காலம் தூங்கிவிட்டோம் இனி இரவு,பகல் என்று பார்க்காமல் அலசி ஆராய்ந்து தகுந்த பயிற்சி கொடுத்து முன்னேற வேண்டும்.

Sunday, July 29, 2012

I am ashamed...

மதியம் சாப்பாட்டு நேரத்தையும் கடந்த மீட்டிங் ஒருவழியாக முடிந்த போது மணி இரண்டு,அதற்கு பிறகு சாப்பிட்டுவிட்டு சகதொழிலாளியோடு பேசிக்கொண்டிருந்த போது “டப்” என்ற சத்தம்.கேட்ட மாத்திடத்திலேயே இது சாதரண மான சத்தம் அல்ல என்பது புரிந்தது.அலுவலக பக்கத்தில் ஒரு பெரிய கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருப்பதால் அங்கிருந்து வந்திருக்குமோ என்ற யோஜனையின் போது இது வேறு திசையில் இருந்து வந்தது என்றார் என் நண்பர்.வெளியில் வந்து என்ன என்று விஜாரிக்கலாம் என்று பார்த்த போது வேலையின் இடத்தின் அதிகாரி ஓடி வந்து பாதுகாப்பு தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு “பியர் விழுந்துவிட்டது” என்று சொல்லி அவ்விடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். நானும் தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அந்த திசை நோக்கி போனேன்.விழுந்த நிலையில் உள்ள Pier ஐ பார்த்த போதே அதற்கான காரணம் புரிந்துவிட்டது.

முதலில் அங்குள்ளவர்களிடம் யாருக்காவது அடி பட்டதா என்று விஜாரித்த போது யாரும் இல்லை என்று பதில் வந்ததால் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.கட்டுமானத்துறையில் இம்மாதிரி நிகழ்வுகள் சகஜம் என்பதால் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் அங்கிருந்த கான்கிரீட்டை அகற்றிவிட்டு முதலில் போக்குவரத்தை சரி செய்தார்கள்.இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருந்தாலும் வடபழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.யாருக்கும் அடியில்லை போக்குவரத்து பாதிக்கப்படவில்லை இது பற்றி இனி கவலைப்படதேவையில்லை என்று CMRL இருந்துவிடவில்லை.இது எப்படி நடந்தது இனி இதுபோல் நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து அதற்கான வேலையில் இறங்கிவிட்டது.இந்த வேலையை குத்தகை எடுத்திருக்கும் நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய கெட்டபேரை கொடுக்கும் அதே சமயத்தில் இதை மறுபடியும் கட்ட ஆகும் நேரம் இக்குத்தகையை முடிக்க ஆகும் நேரத்தில் அதிகமாகக்கூடும்.

இம்மாதிரி நிகழ என்ன காரணம்? நிகழ்வு நடந்த இடத்தை பார்கையில் மிகச்சாதரணமாக அந்த இரும்பு Beam இல் இருக்கும் பற்றவைப்பின் தரம் தான் என்று அனுமானிக்கமுடிகிறது.தரமான பொறியாளர்களின் Investigation மூலம் வரும் முடிவுக்காக காத்திருப்போம். பற்றவைப்பின் தரம் என்று ஒற்றைசொல்லில் சொல்லி முடித்துவிடமுடியாது அதன் பின் 100 கேள்விகள் கேட்கப்படும்.பதிலுக்காக காத்திருப்போம்.

இந்நிகழ்வு நடந்த 10வது நிமிடத்தில் சன் தொலைக்காட்சியில் Flash News ஆக வருகிறது.ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது,நீக்கமற கலந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் பணி அளப்பரியாதது.அதோடு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இந்நிகழ்வை அலசியவிதமும் நன்றாக இருந்தது.





இம்மாதிரியான 5 பீம்கள் இருக்கும் போது இதுமட்டும் முறிய வேறு சில காரணங்கள் இருந்தால் விசாரணையின் போது தெரியக்கூடும்.

Thursday, July 12, 2012

இது அபாயகரமானது.

இந்த பாரம் தூக்கி இருக்கே சரியாக உபயோகப்படுத்தினால் ஒரு அலாவுதீன் பூதம் ஆனால் கொஞ்சம் தப்பினால் நாம் பூதமாகிவிடும்.

கீழே காட்டிய நிலையில் பாரம் தூக்கிக்கு நடுவில் ஒரு Support என்பது அந்த தூக்கி எந்த முறையில் உபயோகிக்கவேண்டுமோ அதற்கு எதிரானது.இந்நிலை சிங்கையிலோ அல்லது அரபு தேசங்களிலோ செய்தால் முதன்மை பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்படுவது சர்வ நிச்சயம் ஆனால் இது இந்தியா. இங்கு தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியவே இல்லையா என்று புரியவில்லை.