Thursday, November 27, 2008

சரிவு- இது கான்கிரீட்டில்

இப்ப உலகம் முழுவதும் நிதிநெருக்கடியால் பல வேலை இழப்புகள்,கம்பெனிகள் மூடல் அது இது என்று சரிவுகளின் ராஜ்யமாக இருக்கு, ஆனால் நான் சொல்லப்போவது கான்கிரீட்டில் சரிவு.

பெரிய பெரிய வேலைகளில் தினமும் கான்கிரீட் வந்துகொண்டிருக்கும் இதெல்லாம் பெரிய பிளான்டுகள் மூலம் போட்டு மிக்ஸ் செய்திருந்தாலும் போடும் இடத்துக்கு வரும் போது அது சரியான நிலையில் தான் இருக்கா என்று பார்க்க ஒரு சின்ன சோதனை இருக்கு,அதுக்கு பேரு சரிவுச்சோதனை (SLUMP TEST)

அதை எப்படி செய்கிறார்கள் என்பதை என்னுடைய தொலைப்பேசி மூலம் எடுத்து ஏற்றிருக்கிறேன் அதனால் தரம் ஓரளவே இருக்கும் என்று நினைக்கிறேன்.



முதலில் அந்த கோனை வைத்து அதனை மூன்று முறையில் நிரப்பவேண்டும்,ஒவ்வொரு முறையும் அந்த கம்பி(16 மி.மீட்டர் விட்டம்) யால் 24 முறை குத்த வேண்டும்.முடிந்த பிறகு மேல்மட்டத்தை சம்மாக வைத்துவிட்டு அந்த கோனை மெதுவாக எடுக்கவேண்டும்.
எடுத்த பிறகு அந்த கம்பியை மேல் வைத்து அதன் கீழ்மட்டத்தில் இருந்து கான்கிரீட்டின் மேல் முனைவரை அளக்கவேண்டும்.இது பொறியாளர் கொடுத்திருக்கும் அளவுக்குள் இருந்தால் கான்கிரீட்டை அனுமதிக்கவேண்டும் இல்லையென்றால் தூக்கிப்போடவேண்டியது தான்.தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் கான்கிரீட் இந்த சோதனையில் தோல்விஅடையும்.

நிரம்ப சொல்வதற்கு இருந்தாலும் போர் அடிக்கும் என்பதால் மேலோட்டமாக சொல்லியுள்ளேன்.

No comments: