Thursday, October 9, 2008

புர்ஜ் துபாய் கோபுரம்

இங்கு(துபாய்) வந்த கொஞ்ச நாள் வரை இந்த கோபுரம் எங்கு இருக்கிறது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வேலை முடிந்து சைட்டைவிட்டு வெளியேறும் நேரத்தில் எதேச்சையாக திரும்பிய போது மங்கலாக ஏதோ தெரிந்தது.நடந்து பஸ் நிறுத்தம் போனபிறகு சற்று சூரியன் கீழிறங்கியவுடன் அந்த கோபுரத்தின் மேல் நிற்கும் பாரம் தூக்கியும் தெரிந்தது.இது தான் இப்போதைக்கு உலகத்திலேயே உயரமான கோபுரம் (600 மீட்டருக்கு மேல்).

பகல் முழுவதும் ஒரு மாதிரியான மணல் காற்று வீசிக்கொண்டு இருப்பதால் தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சரியாக தெரிவதில்லை.

கீழே உள்ள படம் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து எடுத்தது...உங்கள் பார்வைக்காக.



இந்த ஊரைவிட்டு கிளம்பும் முன்பு இதன் மேல் ஒரு தடவையாவது ஏறிவிடவேண்டும்.

2 comments:

துளசி கோபால் said...

கொஞ்சம் கொஞ்சமாய் துபாய் அனுபவங்கள் படிக்க நல்லா இருக்குது குமார்.

சௌ.பெருமாள் said...

நன்றி,துளசி.