Monday, September 15, 2008

வானம் வசப்படும்.

வான்வெளி - இதைப் பற்றி எப்போது அன்னாந்து பார்க்க ஆரம்பித்தேன்? நினைவை அப்படியே கொஞ்சம் பின்னோக்கி இழுத்துப்பார்த்தால்....

நாகப்பட்டினம், வயது 13 அல்லது 14 இருக்கும்.வீட்டின் முற்றத்தில் என் தாத்தா சேரில் உட்கார்ந்திருக்கார்,என் அப்பா வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக இருக்கார்.மணி இரவு 8 மணியிருக்கும்.அப்போதெல்லாம் இரவு சாப்பாடு 7 மணிக்கே முடிந்துவிடும் படுக்கும் வரை வெளியில் தான் இருப்போம்.அப்படி நான் தெருவுக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கும் வேளையில் என் தாத்தா கூப்பிட்டு “இந்த நட்சத்திரம் பற்றி ஏதாவது தெரியுமா?” என்றார்.

அப்போது தான் மேலேவே பார்க்க ஆரம்பித்தேன்.அவர் கற்றுக்கொண்ட விதத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்தார்.அன்று ஆரம்பித்தது இந்த பழக்கம்.சிங்கை வரும் வரை சந்திரனின் தேய்பிறை/வளர்பிறை எப்படி என்று யோசித்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.நின்று பார்த்தால் இப்படியா அல்லது படுத்துக்கொண்டு அதன் அச்சில் பார்க்கவேண்டுமா? என்று பலவித குழப்பங்கள்.

ஒரு வழியாக பல நூலக புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் என் சந்தேகம் தீர்ந்தது.

இந்த அடிப்படையிலேயே இதைப் பற்றி எழுதும் திரு ஜெயபாரதன் மற்றும் குருவி ஆகியோர் பதிவுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைநோக்கி வாங்கிய போது அதன் மூலம் என்னுடைய புரிதல் இன்னும் பன்மடங்காயிற்று.இருந்தாலும் பல புத்தகங்களில் வரும் மேப்பை பார்க்கும் போது தலைச்சுற்றும்,இதை வீடியோ மூலம் யாராவது சொல்லிக் கொடுக்கமாட்டார்களா? என்று தேடி அலைந்து விட்டுவிட்டேன்.

நேற்று பிபிசியின் ஒரு நகர்படம் பார்க்க நேர்ந்தது அதில் வந்த ஒரு காட்சி எனக்கு என்ன தேவையோ அதை அப்படியே அழகாக சொல்லியிருந்தார்கள்,அது உங்கள் பார்வைக்காக....

ஆர்வம் உள்ள்வர்கள் பார்த்து மகிழுங்கள்.



நன்றி:பிபிசி4

No comments: