துபாயில் அவ்வப்போது நண்பர்கள் மூலம் வெளியில் போகும் போது எடுத்த படங்கள் சில கீழே..
கோல்ட் சோக் பக்கம் பொழுது போகாமல் சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த கார் நடைப்பாதை மேல் ஏற்றியிருந்தது வித்தியாசமாக இருந்தது ஆனால் இப்போது பழக்கமாகிவிட்டது.வண்டி நிறுத்த இடமில்லாததால் ஏற்றிவிடுகிறார்கள்.
நடைப்பாதை மேம்பாலத்தில் இருந்து எடுத்தது.இப்படி போக்குவரத்து இருக்கவேன்டும் என்று பிரம்பபிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஐகியா கடைத்தொகுதியின் நுழைவாயிலில் உள்ள அலங்கார விளக்குகள்.
மறுபகுதி.
பாம் ஜுமாரியா போன போது கடலை தூர்ந்தெடுத்து பல விடுதிகளை அமைத்துள்ளார்கள்.ஐரோப்பியா உள்ள மாதிரி வடிவமைத்து வீடு கட்டி/கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.வீடு ஒவ்வொன்றும் மில்லியனுக்கு மேல் போகுதாம்.
இந்த கடலில் விரைவுப் படகு சேவை நடந்துகொண்டிருக்கிறது.
Sunday, October 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment