Friday, February 1, 2008

பிஸ்கெட் நடராஜன்?

என்னுடைய கடவுச்சீட்டை கொடுத்து அனுப்பிய சுமார் 15 நாட்கள் கழித்து திரு சோங்க் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி,இன்றைக்கு இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் இவரிடம் போய் உன்னுடைய கடவுச்சீட்டை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு நான் கிளம்பும் தேதிக்கு விமான பயணச்சீட்டையும் அதனுடன் இணைத்திருப்பதாக சொன்னார்.

அவர் சொன்ன தேதிக்கு அந்த ஹோட்டலுக்கு போனேன்.ஹோட்டல் பேர் என்னவோ பெரிய பெயராக இருந்தாலும் இருட்டான Corridor ஏதோ மனதில் சந்தேகத்தை எழுப்பியவண்ணம் இருந்தது.அறை எண் வந்ததும் தயங்கி தயங்கி காலிங் பெல்லை அழுத்தினேன்.கொஞ்ச நேரம் கழித்து ஒரு இள வயது பெண் கதவை திறந்தார்,உள்ளே கட்டிலின் மேல் ஒரு இரட்டை நாடி ஆள் இடுப்பில் துணி மட்டும் உடுத்திக்கொண்டு இருந்தார்.நான் உள்ளே போன சில நொடிகளில் குளியல் அறையில் இருந்து மற்றொரு இளவயது பெண் வெளியில் வந்தாள்.கொஞ்ச நேரம் பேசுவதற்குள் அவருக்கு வெகுவாக இறைத்தது.

நிலமை அவ்வளவு சுமூகமாக இல்லையே என்ற நினைப்புடன் என் பெயர் சொல்லி,சோங்க் உங்களிடம் என்னுடைய கடவுச்சீட்டை வாங்கிக்கச்சொன்னார் என்றேன்.

உட்காருங்க தம்பி என்றார்.பரவாயில்லை என்றேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஏதோ பையை எடுக்கச்சொல்லி அதனுள் தேடி திரும்ப பெயரை கேட்டு,கடவுச்சீட்டுடன்,விமான டிக்கெட் மற்றும் அமெரிக்க டாலர் 500ம் கொடுத்தார்.

நான்,எதற்கு இந்த 500 டாலர் என்றேன்.அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த சிங்கப்பூர் பார்ட்டி கொடுக்கச்சொன்னார் கொடுக்கிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி “இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுவிடுங்கள்' என்றார்.நாணயமாக நடந்துகொண்டார்.நம்பவே முடியவில்லை.ஒரு காலத்தில் சிங்கையில் “பிஸ்கெட் நடராஜ்” என்பவர் அதற்கேற்ப தொழில் செய்துவந்தது இங்கு வந்ததும் தெரிந்தது.பிற்காலத்தில் அவர் புகைப்படம் பத்திரிக்கையில் பார்த்தபோது நான் சந்தித்த நபர் அவரைப்போலவே இருந்ததாக தோனியது.இவரை பிடிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு இருக்கும் போது இந்தியாவில் மாரடைப்பில் இறந்ததாக ஞாபகம்.

கையில் டிக்கெட் வந்ததும் எல்லாம் சுமூகமாகவே முடிந்தது, நிம்மதியாகத்தானே இருக்கும்?

அதான் இல்லை.

வீட்டில் பெற்றோர்கள் முதலில் இருந்தே அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.இங்கே நல்ல வேலையில் இருக்கும் போது எதுக்கு வெளிநாடெல்லாம் போகனும் என்று இழுத்தார்கள்.

நல்ல கம்பெனி,சம்பளம் உள்ள வேலை என்றாலும் வருடம் முடிந்து கையில் நிற்கும் தொகையை பார்த்து, நாளை நம்மில் யாராவது மருத்துவமனையில் படுக்க நேர்ந்து கத்தி வைக்கும் படி ஆனால் வரப்போகும் 1 அல்லது 2 லட்சம் ஆனால் எங்கு போய் புரட்டுவது என்றேன்.மழைக்காலத்துக்கு சேமிக்க உடம்பில் வலு இருக்கும் போது அதுவும் வாய்ப்பு கதவை தட்டும் போது திறந்துபார்க்காமல் இருக்க முடியுமா?அவர்கள் மனப்பூர்வமான அனுமதியில்லாமல் தான் கிளம்பினேன்.

மனைவியை கேட்டேன்...உங்களுக்கு சரி என்று தோனினால் செய்யுங்கள் என்றார்.

இதெல்லாம் விட முக்கியமான பிரச்சனை.இப்போது இருக்கும் கம்பெனியை விட்டு விட்டு போவதா இல்லை சுமார் 25 நாட்கள் விடுப்பை வைத்து விளையாடுவதா? என்பது தான்.எனக்கு வந்தியிருப்பது என்னவோ விசிட் பாஸ் தான்,நான் அங்கு போன பிறகு தான் Employment Pass க்கு விண்ணப்பிக்க வேண்டும்.சில சமயம் இந்த அனுமதியை நிராகரிப்பதும் நடக்கும்,அப்படி நடந்தால்,திரும்ப இந்தியாவுக்கே வந்துவிட வேண்டும்.அப்படி நேரிட்டால் இந்த வேலையை எப்படி திரும்ப பெருவது? குழப்பம் தான்.

நான் கேட்டு வந்ததோ 2 வாரம் இப்போது 1 மாதம் ஆகிவிட்டது.

பல முறை யோசித்துவிட்டு,விடுமுறைய நீட்டித்துவிட்டு தகப்பனாரிடம் எதற்கும் என்னுடைய ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

மார்ச்-1995 சிங்கை வந்து சேர்ந்தேன்.

இன்னும் இருக்கு,பிறகு சொல்கிறேன்.

5 comments:

துளசி கோபால் said...

கிரிமினல் நடவடிக்கையில் இருக்கும் சிலர், நாணயமாவும் இருப்பாங்க.
பிச்கெட் போல!!!

துளசி கோபால் said...

கிரிமினல் நடவடிக்கையீல் இருக்கும் சிலர், நாணயமாவும் இருக்காங்க. பிஸ்கெட் போல்!!!

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
இவர் அவர்தானா என்று தெரியவில்லை.
சினிமாக்களில் கூட அப்படித்தான் காட்டுகிறார்கள்,உண்மையாக இருக்கக்கூடும்.

இலவசக்கொத்தனார் said...

இப்போ கடவுச்சீட்டை எல்லாம் இப்படிக் குடுப்பீங்க?!

ரொம்ப சுவாரசியமாத்தான் இருக்கு!! இன்னும் சொல்லுங்க.

சௌ.பெருமாள் said...

இப்பெல்லாம் கடவுச்சீட்டை அப்படி கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை,காலம் கெட்டுக்கிடக்கிறது.