போன பதிவில் என் பாஸ் சொன்னதை கேட்டு கோபம் வந்ததை சொன்னேன்.அதற்கு காரணம் அவர் போகச்சொன்ன இடம் பஞ்சாப்பில் உள்ள ராஜ்புரா என்ற இடம்.
கடந்த 2.5 வருடங்கள் குடும்பத்தை பிரிந்து மலேசியாவில் இருந்தேன் மறுபடியும் குடும்பம் இல்லாமல் அங்கு போவதை கேள்விப்பட்டவுடன் கோபம் வந்தது.நானும் வேறு எங்காவது கொடுங்களேன் என்றதற்கு உன் மலேசியா அனுபவம் ராஜ்பூராவில் தேவைப்படும் என்றார்.அது எவ்வளவு பொய் என்பது பிற்பாடுதான் தெரிந்தது.இந்த கம்பெனியில் இப்படித்தான் பொய் சொல்லி பல சமயங்களில் ஏதோ ஒரு ஆளை அனுப்பிவைத்துவிடுவார்கள்.சரி இன்னும் எவ்வளவு நாள் ஒப்பேத்தாலாம் என்று நினைத்து அவரிடம் என்னுடைய மலேசியாவில் இருந்து வரவேண்டிய ஷிப்மெண்ட் இன்னும் வரவில்லை அது வந்தவுடன் போகிறேன் என்றேன்.சரி என்று ஒரு வாரம் கால தாமதம் ஆனது.அப்படியும் ஷிப்மெண்ட் வரவில்லை.அதற்குள் பாஸ் நீ முதலில் ராஜ்பூரா போய்விடு ஷிப்மெண்ட் வந்தவுடன் நீ திரும்பி வந்து எடுத்துக்கொள் என்றார்.
இதற்கிடையில் ஒரு விஷயம் சொல்லவிட்டுப்போய்விட்டது. சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் போது என்னுடைய உறவினர் அந்த நேர்காணல் கம்பெனி முதலாளியை கூப்பிட்டு நீ வந்து போன விபரம் சொல்கிறேன்,அதற்குப் பிறகு பார்ப்போம் என்றார்.அதுவும் சரி என்று தோனியது அதற்குப் பிறகு அதை மறந்துபோய்விட்டேன்.
இந்த விஷயம் வேறு ஞாபகம் வந்ததால்,சரி ஷிப்மெண்ட் தேதியும் சிங்கப்பூர் விபரமும் தெரியவந்தால் அப்படியே இங்கிருந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.
டெல்லி வந்து சித்தப்பா பையனிடம் விபரம் கேட்டு ராஜ்பூரா பஸ்ஸில் ஏறினேன்.சுமார் 3.5 மணி நேரப்பயணம் என்று நினைக்கிறேன்.தலைப்பாகை கட்டியவர்களுடன் சுமார் 4 மணி நேர பயணத்தில் ராஜ்பூரா வந்து இறங்கினேன்.ஒரு ரிக் ஷா வைத்துக்கொண்டு விஜாரித்து அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் சென்றேன்.
மறு நாள் காலை மெஸ்ஸில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு சைட்க்கு போனால் இப்போது தான் வேலை ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது.தற்காலிக கட்டங்கள் கட்டும் வேலை மட்டும் நடந்துகொண்டிருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனது.வேலை இடத்தில் பகல் நேரத்திலேயே கொசு ஆளை தூக்கிப்போய்விடும் நிலையில் இருந்தது.வேலை இடத்துக்கு பக்கத்தில் ஒரு தாபா,டீ/பஜ்ஜி சாப்பிட மற்றபடி சாலையில் இரு பக்கங்களிலும் யூகலிப்டஸ் மரங்கள்.
மேலும் தொடரும்.
Friday, December 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment