Thursday, December 6, 2007

பொட்டி தூக்க வேண்டாம்.

ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுக்கு பயணப்படும் போது இந்த மூட்டை முடிச்சு நம்மளை ஒரு வழி பண்ணிவிடும்.அதை ஏற்றி,இறக்கி அவர்கள் டேக் போடும் வரை பிரச்சனை தான்.

இங்கு சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் அவர்கள் தங்கள் மூட்டையை முதலிலெயே இணையம் மூலம் புக் செய்துவிடலாம்.இதனால் விமான நிலையம் போனவுடன் குடியேற்ற வேலை மட்டுமே பாக்கி இருக்கும்.இப்போது அதை இன்னும் மேம் படுத்த எண்ணி நம் முடிச்சுகளை விடுதியிலேயே வாங்கிக்கொண்டு உங்களுக்கு விமானம் ஏறும் வேலை மாத்திரம் பாக்கி வைக்கப்போகிறார்களாம்.

கீழே உள்ள சலனப்படம் பாருங்க.




நன்றி: வசந்தம் சென்ரல்.

2 comments:

துளசி கோபால் said...

நல்ல ஐடியாதான். ஆனா காணாமப்போகாம பெட்டிகள் வந்து சேரணும்.

இன்னும் ஆறு விமான சர்வீஸ்கள் சேரப்போகுதுன்றாங்களே...அதுலே ஏர் நியூஸிலாந்து இருக்குமோ என்னவோ......

ஆனா இது டூரிஸ்டுகளுக்கு மட்டுமே பயனாக இருக்கும்.

நமக்குத்தான் கிளம்பறவரைக்கும்
பெட்டிக்குள்ளே திணிக்க சாமான்கள் வந்துக்கிட்டே இருக்குமே:-)))

சௌ.பெருமாள் said...

கிளம்பறவரைக்கும்
பெட்டிக்குள்ளே திணிக்க

அப்படி செய்யாவிட்டா அது பயணமே இல்லையே!!