Wednesday, December 24, 2008

எலிம் தேவாலயம்

கொஞ்ச நாளாக துபாய் பதிவாக போட்டுக்கொண்டிருந்த்தால் இந்த சொந்தக்கதை தேங்கிவிட்டது.

இதன் முந்தைய பதிவு இங்கே.


புது நிறுவனத்தில் சேரும் நாளும் வந்தது.அவர்கள் வேலை நடக்கும் இடம் சிரங்கூன் சாலையில் இருக்கும் எலிம் தேவாலயத்துக்கு நேரே வரச்சொல்லிவிட்டார்கள்.வேலை இன்னும் அவ்வளவாக ஆரம்பிக்காத நிலை.வேலையிடம் மண் மிகவும் இளகிய தன்மையுடன் இருந்ததால் அதை
கெட்டிப்படுத்த ஜெட் கிரவுட்டிங் என்னும் முறையில் சிமிண்டை மண்ணுக்குள் செலுத்தி அதை மேம்படுத்தினார்கள்.

இதன் மேல் விபரங்கள் படங்களுடன் அழகாக இங்கு கொடுத்திருக்கார்கள்,ஆர்வம் உள்ளவர்கள் போய் பார்க்கலாம்.

அதன் தொடர்பில் சில படங்கள் கீழே..





இந்த வேலையிடத்தில் இதை சுமார் 12 மீட்டர் ஆழத்திலிருந்து செய்ததாக எண்ணம்.அதில் எனக்கு அவ்வளவாக வேலையில்லை பொழுது போக வரப்போகும் கட்டிடத்தின் வரைபடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்படியே சுமார் 1 மாதம் ஓடியது

No comments: