Saturday, June 16, 2007

Pile - தாங்கும் சக்தி (1)

சரி, இப்போது Coffer Dam வேலை முடிந்து விட்டது,அதற்கடுத்து பைல் அடிக்க வேண்டும்.எப்படி அடிக்க வேண்டும்,எவ்வளவு அடிக்கவேண்டும்? எப்போது நிறுத்த வேண்டும்?
பார்ப்போமா?

இதையெல்லாம் முடிவு செய்வது அந்த பால வேலையில் ஈடுபட்டிருக்கும் பொறியாளரின் பணி.ஒரு பைலின் மீது எவ்வளவு பாரம் வருகிறது என்று பார்த்து,அதற்கான வழிமுறைகளை கண்டு முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஆற்றின் படுகையில் மண் வளம் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

முதல் வேலை எந்த மாதிரி ஹேமர் உபயோகிக்கப்போகிறோம் என்று பார்த்து அதன் Energy எவ்வளவு என்று பார்த்து,முடிவு செய்யவேண்டும்.ஆதாவது ஒரு தடவை ஹேமர் பைலை அடிக்கும் போது எவ்வளவு மில்லி மீட்டர் இறங்க வேண்டும் என்று பார்க்கவேண்டும்.இதிலும் பல ஆச்சரியங்கள் உள்ளன.வெற்றுப்பார்வைக்கு பைல் மேலிருந்து வரும் பாரத்தை அப்படியே கீழே கொண்டு செல்வதாகத்தான் தெரியும்.நிஜத்தில் அப்படியில்லை.வரும் பாரத்தில் பைலின் கீழ் முனைக்கும் போகும் பாரம் குறைவாக இருக்கும்.மீதி எங்கே போகிறது என்று கேட்கிறீர்களா?பைலை சுற்றி உள்ள இருக்கமான மண் மூலம் பெரும் பகுதி பாரம் சென்றுவிடுகிறது.இதையெல்லாம் எங்களை போல் வேலை இடத்தில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்?அதற்கான மிகப்பெரிய விலையை நாங்கள் கொடுக்கவேண்டியிருந்தது.அதையும் பிறகு சொல்கிறேன்.

ஹேமர் கிடைத்துவிட்டது,அதை நிறுவ தேவையான டவரும் கிடைத்துவிட்டது.பொறியாளர்கள் தேவையான விபரங்கள் கொடுத்துவிட்டார்கள்.கீழே உள்ள படத்தில் "Rig" என்று சொல்லப்படுகிற டவரை பார்க்கலாம்,அதன் மேல் மஞ்சள் கலரில் உள்ள ஹேமரையும் பாருங்கள்.இது ஹைட்ராலிக் முறையில் பாரத்தை தூக்கி சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து விடும்.அதன் மூலம் கிடைக்கும் விசையில் பைல் கீழே போகும்.



தெப்பத்தின் மீது உள்ள பைலகளின் படத்தை கீழே பார்க்கலாம்.



உள்ளூரில் கிடைக்கும் ஹேமரையும்,நாங்கள் தயாரித்த டவரையும் வைத்து முதல் பைல் அடித்தேம்,அதற்கு மறக்காமல் பூஜையும் போட்டோம்.அந்த படம் தான் கீழே உள்ளது.



படத்தின் வலது கோடியில் உள்ளவர் தான் எங்கள் Project Manager.பூஜை செய்பவர் எங்கள் டிரைவர்.

பைல் அடித்த பிறகு அதை "Load Test" செய்வதற்கான வேலையில் இறங்கினோம்.இதே வேலை தரையில் இருந்தால்,Test செய்யவேண்டிய பைலின் மீது கான்கிரீட் கற்களை அடிக்கி சோதிப்போம்.இது ஆற்றின் மேல் என்பதால் செய்முறைகள் மிகவும் வித்தியாசப்பட்டன.

எப்படி?

அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

No comments: