Wednesday, June 18, 2008

பிக்பாக்கெட்டா? தொலைந்ததா?

அடையாள அட்டை தொலந்து இரண்டு வாரம் ஆகியும் எந்த விபரமும் கிடைக்காததால், போலீஸ் ரிப்போர்ட்டுடன் குடிநுழைவுத்துறைக்கு போனேன்.வரிசை பிடித்து நின்றேன்,இப்படி நிற்க ஆரம்பிக்கும் போதே ஒரு ஒழுங்கு முறை ஆரம்பமாகிவிடுகிறது,யாரும் யாரையும் மோதுவதில்லை அடுத்தவரை கள்ளத்தனமாக முந்திக்கொண்டு போவதில்லை.நம்மவர்கள் இருந்தால் நம் தோளுக்கு மேல் ஒரு வாட்டியாவது எட்டிப்பார்காமல் இருக்கமாட்டார்கள்,அப்படி என்ன அவதியோ! இது சாப்பாட்டுக்கடை வரிசையில் நடக்கும்.கோமளவிலாசுக்கு போனால் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

என் முறை வந்தது,போலீஸ் கடிதத்தை கொடுத்ததும்அந்த அதிகாரி ஒரு கேள்வி கேட்டார்,யாராவது விபரமானவங்க பதில் சொல்லுங்கள்...

திடிரென்று சாப்பிட போன இடத்தில் என் அடையாள அட்டை காணாமல் போய்விட்டது,இதை எப்படி வகைப்படுத்துவது?

காணாமல் போனதாகவா? அல்லது பிக்பாக்கெட் யில் இழந்ததாகவா?

பிக்பாக்கெட் என்றால் எனக்கு அரை குறையாக தெரியும் என்று எதிர்பார்க்கிறார்களா?

இதைத்தான் அந்த அதிகாரி என்னிடமும் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு காணாமல் போனது தான் தெரியும் அதை எப்படி பிக்பாக்கெட் என்று வகைப்படுத்தமுடியும் என்று?அவர்களுக்கு சொல்லி கொடுத்துள்ளதில் இது இரண்டைத்தவிர வேறு இல்லாத்தால் அந்த அதிகாரியால் எதுவும் சொல்லமுடியவில்லை.நீங்கள் தான் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லனும் என்றார். எனக்கு இருந்த அவசரத்தில்"காணாமல்" தான் போனது என்றேன்.

அப்படியென்றால் 100 வெள்ளி கட்டிவிட்டு இரண்டு வாரம் கழித்து அடையாள அட்டையை எடுத்துச்செல்லுங்கள் என்றார்.பணத்தை கட்டி வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது.

காணாமல் போனது என்றால்- என்னுடைய தவறு - அதற்கு 100 வெள்ளி தெண்டம்

பிக்பாக்கெட் என்றால் - என் தவறு இல்லை -- அதற்கு 50 வெள்ளி தெண்டம்.

என்ன செய்வது எல்லாவற்றையும் பட்டு தான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அடையாள அட்டை தொலந்தால் என்னென்ன பிரச்சனை வரும் பார்ப்போமா?

1.கள்ளக்குடியேறி உபயோகிக்க பயன்படுத்தலாம். (நல்ல வேளை இது என் அட்டையில் நடக்கவில்லை)

2.உங்கள் அட்டையை வைத்து கள்ள வட்டிக்கும்பலிடம் கடன் வாங்கலாம்.

3. இருக்கும் எல்லா தொலைபேசி நிறுவனத்திலும் கணக்கு ஆரம்பித்து புது தொலைப்பேசி/ அந்த மாதத்தில் பேசப்படும் அழைப்புகளுடன் கம்பிநீட்டலாம். தலைப்பேசி நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத்துறையும் இந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதில்லை.இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்.தகவல்கள் கை மாறி மாறி நம் தகவல்கள் எங்கெல்லாம் போய் நிற்கும் என்று தெரியாது பாருங்கள்.

4.எனக்கு தெரியாம இன்னும் பல வழிகள் இருக்கலாம்....

இதில் எங்கெங்கு மாட்டிக்கொண்டேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

2 comments:

திவாண்ணா said...

mmmmmmmmm
பல விஷயங்கள் அனுபவப்பட்டுதான் தெரிஞ்சுகொள்ள வேண்டி இருக்கு! பாவம் மாட்டிக்கிட்டீங்களா? அடுத்த பதிவை எதிர்பாக்கிறேன்.

சௌ.பெருமாள் said...

வாங்க திவா
என்ன பண்ணுவது??