Wednesday, December 23, 2009

பூமிக்கு கீழ்.

அடுத்த நிறுவனம் "பெயர் சொல்ல முடியாது".
எவ்வளவுக்கு எவ்வளவு பூமிக்கு மேல் வேலை பார்த்தேனோ அப்படியே பூமிக்கு கீழேயும் போக வேண்டிய வேலை வந்தது.அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் இடம் சில கி.மீட்டர் என்பதால் கம்பெனி நான்கு சக்கர வண்டி எடுத்துக்கொண்டுதான் போகனும்.அப்போது எனக்கு 4 சக்கர வாகனம் ஓட்டத்தெரியாது.சிறியவனாக இருக்கும் போதிலிருந்தே பல வேளைகளில் ஒட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து அவர்கள் அசைவுகள் மூலம் ஓரளவு தெரிந்துவைத்து மனதில் இருத்திக்கொள்வேன்.வேலை செய்ய வந்த பிறகும் கூட ECC யில் ஜீப்பில் முன் புறம் உட்காருவது என்பது தான் என் இஷ்டம்.இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறையாவது வட்டச்சக்கர கைப்பிடி என் கையில் வந்ததில்லை.கண் பார்த்து மனதில் நிறுத்தியதெல்லாம் வேலைக்காகுமா?அதெல்லாம் வெறும் பார்வை தானே!
வேலை இடத்துக்கு போவதென்றால் ஆரம்பத்தில் சக பொறியாளருடன் வண்டியில் தொற்றிக்கொள்வேன்.கொஞ்ச நாள் இப்படியே போனாலும் ஒரு நாள் என்னை அழைத்துப்போக யாரும் இல்லாத நிலையில் பொறியாளர் ஒருவர் வண்டி சாவியை என்னிடம் கொடுத்து "நீயே போய்ட்டு வா" என்று சொல்லி வண்டி ஓட்டத்தெரியும் இல்ல? என்றார்.ஏதோ அசட்டு தைரியத்தில் தெரியும் என்று சொல்லி வாங்கிவந்துவிட்டேன்.வண்டி Parking இடத்தில் இருந்தது.எதிரெதிரே வண்டிகளும் இருந்தன.முதலில் வண்டியை பின்புறம் எடுக்கனும்,ரிவர்ர்ஸ் கியர் போட்டு கிளட்சை மெதுவாக விட்டு ஆக்ஸிலெட்டரை அழுத்துகிறேன் வண்டி பின்பக்கம் போகவில்லை.மறுபடியும் கை பிரேக்கெல்லாம் சரியாக விடுபட்டிருக்கா என்று பார்த்து மறுபடியும் ஆக்ஸிலேட்டரை அழுத்தும் போது கொஞ்சம் பின்னால் போய் அப்படியே நின்றுவிட்டது.எங்களுக்கு கொடுத்த வண்டியெல்லாம் அரத பழசு என்று சொல்லமுடியாவிட்டாலும் அடிக்கடி மக்கர் செய்யக்கூடிய வண்டிதான். நான் இப்படி தினறுவதை பார்த்த ஒரு மியன்மார் ஓட்டுனர் என்னை கீழிறங்கச்சொன்னார்.அவர் கீழிறங்கச்சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது இருந்தாலும் இந்த தவறு மறுபடியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.அந்த மியன்மார் ஓட்டுனர் சரக் என்று பின்னால் எடுத்து வண்டியை முன்பக்கமாக நிறுத்தினார்,அதன் பிறகு எப்படியோ ஓட்டிப்போய் திரும்ப வந்தேன்.

என்ன தான் 2 வருட வேலை என்றாலும் அந்த இடத்திலேயே என்னை 5 வருடம் உட்கார்த்தி வைத்து வேடிக்கை பார்த்தது இந்த நிறுவனம்.தினம் காலை 8 மணிக்கு வரவேண்டியது மதியம் சாப்பிட வேண்டியது மாலை 5 மணிக்கு போக வேண்டியது என்ற பழக்கம் வேலை முடிந்து 2 வருடங்களாக போய்கொண்டிருந்தது.அடுத்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலை கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் அது வரும் வரை சும்மாகவே வைத்திருந்தார்கள். எனக்கு தான் கொடுமையாக இருந்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.இந்த கொடுமை என்னை அடுத்த வேலை இடத்துக்கு மாற்றும் வரை தொடர்ந்தது.இவர்கள் லாபம் எவ்வளவு இருந்தால் இந்த மாதிரி சம்பளம் கொடுக்கமுடியும் என்று வேறு விதமான மனக்கணக்கு போட ஆரம்பித்தேன்.

இங்கு செய்த பல வேலைகள் எனக்கு புதியவை ஆனால் வெளியில் சொல்ல முடியாதவை என்பதால் அப்படியே அப்பீட்டாகிக்கிறேன்.

இந்த மாதிரி அனாமத்த நேரங்களில் கிடைத்த செய்திதாளில் உள்ள வேலை நிலவரங்களை உண்ணிப்பாக பார்க்க ஆரம்பிதத்தின் விளைவு துபாய் பக்கம் போய் நின்றது.நடுவில் வந்த சில வேலைகள் சம்பள் இழுபறியால் கை நழுவிப்போனது.

இந்நிறுவனம் எதிர்பார்த்த வேலை இப்போதைக்கு இல்லை என்றதால் என்னை வேறு ஒரு வேலைக்கு அனுப்பினார்கள்.அங்கு இருந்த "தலை" 1960களில் உள்ள அறிவோடு வேலை செய்ததால் மற்றும் செய்யச்சொன்னதால் சீக்கிரமே விடுதலைபெற வேண்டிய கட்டாயம் வந்தது.

2 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... சம்பளம் கொடுத்துப் பதிவெழுத நேரமும் கொடுத்துருக்காங்க:-)))))))

எஞ்சாய்!!!!!

திவாண்ணா said...

இந்த சமயம்தான் பதிவுகளும் போட நேரம் கிடைச்சதோ?