Wednesday, August 1, 2007

நிலத்தின் மேல்

போன பதிவில் தரைக்கு மேல் அடிக்கும் பைல் பற்றிய படத்துடன் முடித்திருந்தேன்.

அப்படி அடித்து முடித்தவுடன்,அஸ்திவாரம் போட இருக்கும் நிலைக்கு கீழே மண்ணை தோண்டவேண்டும்,பைல்களை தேவைக்கு ஏற்ப வெட்ட வேண்டும்.இப்படி வெட்டிய பிறகு கம்பி கட்டுவதற்கு முன்பு (Lean Concrete) 2" உயரத்துக்கு கொஞ்சம் தரம் குறைந்த கான்கிரீட் போடுவோம்.இதன் மேல் கட்டிடத்தின் பாரம் வராது.இதன் பயனே கம்பிகளின் மீது மண் படாமல் இருப்பதற்கும்,Formwork எனப்படும் ஷட்டரை நிறுத்தி வைப்பதற்கும் & ஆட்கள் வேலைசெய்வதற்கும் மட்டுமே பயன்படும்.

இப்படி செய்தவுடன் அஸ்திவாரம் மற்றும் அதன் மேல் எழும் தூண்கள் வேலை எப்போதும் போல் நடக்கும்.இதில் அவ்வளவு தொழிற்நுட்பம் கிடையாது.அதே சமயத்தில் ஒரு தூணுக்கும் மற்ற தூணுக்கும் இடைப்பட்ட நீளத்தை சரி செய்துகொள்ள வேண்டும்.இப்படி செய்யாவிட்டால் ஒரு தூணுக்கும் மற்ற தூணுக்கும் இடையில் வரும் பீமினால் பிரச்சனை வரக்கூடும்.



மேலே உள்ள படத்தில் பாருங்கள்.. பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

முதலில் தெரிவது குச்சி குச்சி யாக சில தூண்கள்.இது பைலை சுற்றி போடப்பட்ட கான்கிரீட்.இப்படி போடு வதால் இரும்பை துரு பிடிப்பதில் இருந்து காப்பாற்ற முடியும்.கான்கிரீட் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள் பைலையும் அஸ்திவாரத்தையும் இணைக்கும் பகுதி.இதனால் தூணில் இருந்து வரும் பாரம் இந்த பைல் மூலம் பூமிக்கு அனுப்பப்படும்.

படத்தின் கொஞ்சம் மேல் பாருங்கள், ஒரு தூணுக்கான அஸ்திவாரம் போடப்பட்டு ஷட்டரை பிரித்துக்கொண்டுள்ளார்கள். மிக முக்கியமாக அந்த கான்கிரீட் மேல் போடப்பட்டுள்ள ஈர சாக்கை பாருங்கள்.இப்படி செய்வது தான் முறை.வெகு வேகமாக இழக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்தினால் கான்கிரீட் நல்ல இறுக்கம் அடையும்.இதை பல கம்பெனிகள் கண்டுகொள்வதில்லை.

நிலத்தில் என்ன செய்கிறோமா அதையே ஆற்றுக்கு நடுவே செய்வோம்.என்ன நிலத்தில் மண்ணை தோண்டுகிறோம் அங்கு மணலை போட்டு நிரப்புவோம்.தேவையான அளவுக்கு நிரப்பி அதன்மேல் வேலை செய்வோம்.

எல்லா தூண்களும் போடப்பட்டவுடன் அதன் மேல் இரும்பு பீம்கள் வைக்கவேண்டும்.இது நிலத்தில் இருக்கையில் ஒரு பாரம் தூக்கியுடன் அப்படியே தூக்கி வைத்துவிடவேண்டும்.ஆறும், நிலமும சேரும் இடத்தில் இந்த பாரம் தூக்கி கை கொடுக்காது.அதற்குப்பதிலாக இந்த மாதிரி ஒரு Derrik ஒன்றை வைத்து அதன் உதவியுடன் நிலத்தில் இருந்து அந்த இரும்பு பீமை இழுத்து/தூக்கி சரியான இடத்தில் வைப்பார்கள்.
அந்த படம் கீழே..



மீதி அடுத்த பதிவில்.

2 comments:

chakkara said...

After a long Gap (period of casting a pile???)
Chakkara

சௌ.பெருமாள் said...

Mr Chakkara
U mean from my last posting? reason laziness.
On work,concentrated on river piling,so we purposely delayed land piling.