விஜயதசமி அன்று மாலை அங்கு வருமாறு அழைந்த உறவினர் அங்கு கச்சேரி நடக்கும் என்று சொல்லவில்லை,சொல்லியிருந்தால் அந்த பக்கமே போயிருக்கமாட்டேன்.எனக்கும் கர்நாடக சங்கீததுக்கும் ரொம்ப தூரம்.
இடத்தை கண்டுபிடித்து கதவை திறந்த போது வந்த வயலின் சத்தம் என் காதையே துளைப்போட்டு விடும் போல் இருந்தது.எப்படி இவ்வளவு சத்தமாக வைத்து ஒரு சிறிய அறையில் 25 பேர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வியந்தேன்.
சில நொடிகளிலேயே நெளிய ஆரம்பித்துவிட்டேன் இருந்தும் படத்தில் இருக்கும் பெண்ணை உற்சாகப்படுத்த சிறிது நேரம் உட்காந்துவிட்டு வந்தேன்.
No comments:
Post a Comment