Sunday, July 29, 2012

I am ashamed...

மதியம் சாப்பாட்டு நேரத்தையும் கடந்த மீட்டிங் ஒருவழியாக முடிந்த போது மணி இரண்டு,அதற்கு பிறகு சாப்பிட்டுவிட்டு சகதொழிலாளியோடு பேசிக்கொண்டிருந்த போது “டப்” என்ற சத்தம்.கேட்ட மாத்திடத்திலேயே இது சாதரண மான சத்தம் அல்ல என்பது புரிந்தது.அலுவலக பக்கத்தில் ஒரு பெரிய கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருப்பதால் அங்கிருந்து வந்திருக்குமோ என்ற யோஜனையின் போது இது வேறு திசையில் இருந்து வந்தது என்றார் என் நண்பர்.வெளியில் வந்து என்ன என்று விஜாரிக்கலாம் என்று பார்த்த போது வேலையின் இடத்தின் அதிகாரி ஓடி வந்து பாதுகாப்பு தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு “பியர் விழுந்துவிட்டது” என்று சொல்லி அவ்விடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். நானும் தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அந்த திசை நோக்கி போனேன்.விழுந்த நிலையில் உள்ள Pier ஐ பார்த்த போதே அதற்கான காரணம் புரிந்துவிட்டது.

முதலில் அங்குள்ளவர்களிடம் யாருக்காவது அடி பட்டதா என்று விஜாரித்த போது யாரும் இல்லை என்று பதில் வந்ததால் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.கட்டுமானத்துறையில் இம்மாதிரி நிகழ்வுகள் சகஜம் என்பதால் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் அங்கிருந்த கான்கிரீட்டை அகற்றிவிட்டு முதலில் போக்குவரத்தை சரி செய்தார்கள்.இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருந்தாலும் வடபழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.யாருக்கும் அடியில்லை போக்குவரத்து பாதிக்கப்படவில்லை இது பற்றி இனி கவலைப்படதேவையில்லை என்று CMRL இருந்துவிடவில்லை.இது எப்படி நடந்தது இனி இதுபோல் நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து அதற்கான வேலையில் இறங்கிவிட்டது.இந்த வேலையை குத்தகை எடுத்திருக்கும் நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய கெட்டபேரை கொடுக்கும் அதே சமயத்தில் இதை மறுபடியும் கட்ட ஆகும் நேரம் இக்குத்தகையை முடிக்க ஆகும் நேரத்தில் அதிகமாகக்கூடும்.

இம்மாதிரி நிகழ என்ன காரணம்? நிகழ்வு நடந்த இடத்தை பார்கையில் மிகச்சாதரணமாக அந்த இரும்பு Beam இல் இருக்கும் பற்றவைப்பின் தரம் தான் என்று அனுமானிக்கமுடிகிறது.தரமான பொறியாளர்களின் Investigation மூலம் வரும் முடிவுக்காக காத்திருப்போம். பற்றவைப்பின் தரம் என்று ஒற்றைசொல்லில் சொல்லி முடித்துவிடமுடியாது அதன் பின் 100 கேள்விகள் கேட்கப்படும்.பதிலுக்காக காத்திருப்போம்.

இந்நிகழ்வு நடந்த 10வது நிமிடத்தில் சன் தொலைக்காட்சியில் Flash News ஆக வருகிறது.ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது,நீக்கமற கலந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் பணி அளப்பரியாதது.அதோடு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இந்நிகழ்வை அலசியவிதமும் நன்றாக இருந்தது.





இம்மாதிரியான 5 பீம்கள் இருக்கும் போது இதுமட்டும் முறிய வேறு சில காரணங்கள் இருந்தால் விசாரணையின் போது தெரியக்கூடும்.

Thursday, July 12, 2012

இது அபாயகரமானது.

இந்த பாரம் தூக்கி இருக்கே சரியாக உபயோகப்படுத்தினால் ஒரு அலாவுதீன் பூதம் ஆனால் கொஞ்சம் தப்பினால் நாம் பூதமாகிவிடும்.

கீழே காட்டிய நிலையில் பாரம் தூக்கிக்கு நடுவில் ஒரு Support என்பது அந்த தூக்கி எந்த முறையில் உபயோகிக்கவேண்டுமோ அதற்கு எதிரானது.இந்நிலை சிங்கையிலோ அல்லது அரபு தேசங்களிலோ செய்தால் முதன்மை பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்படுவது சர்வ நிச்சயம் ஆனால் இது இந்தியா. இங்கு தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியவே இல்லையா என்று புரியவில்லை.


 

Saturday, February 19, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 18, 2011

மதுராந்தகம்.

எப்பவோ இளமை கால நிகழ்வுகளை மனைவிடம் சொன்னதை தவறாமல் ஞாபகம் வைத்து அவ்வபோது இங்கு போகனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.நேரமும் சரியான போக்குவரத்தும் இல்லாத்தால் தள்ளிப்போய்கொண்டிருந்தது.ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நான் முதன் முதலில் பெண் பார்க்க போன இடம் தான் இந்த மதுராந்தகம்.பெண்ணை கண்ணில் காட்டாமல் திண்ணையில் வைத்தே பேசி அனுப்பிவிட்டார் பெண்ணின் அப்பா,தப்பித்தேன் அப்போதைக்கு.நான் போன சமயம் மதியம் என்பதால் கோவிலை பூட்டிவிட்டார்கள், மாலை வரை காத்திருக்க முடியாததால் ராமரை சேவிக்க முடியாமல் போனது.
போன ஞாயிறு மகனின் GATE தேர்வுக்காக Cresent Engineering College இல் கொண்டுவிட்டு விட்டு காத்திருந்த 3 மணி நேரத்தை எப்படி போக்குவது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதுவரை பக்கத்தில் இருக்கும் மாமா வீட்டுக்கு போய்விட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம்,திடிரென்று மதுராந்தம் போய் திரும்பிவிடலாமா என்ற யோஜனை வந்தது.பக்கத்தில் உள்ள ஆட்டோ காரரிடம் கேட்ட போது 40 கி.மீ தான் என்றார்,கணக்கு போட்டு பார்த்த போது மகிழுந்துவில் அதற்குள் வந்துவிடலாம் என்று தோன்றி கிளம்பிவிட்டோம்.
வழக்கம் போல் மதுராந்தகம் உள்ளே செல்ல கொஞ்ச தூரம் இருக்கும் இடத்தில் அறிவிப்பு பலகை இருந்தது.உள்ளே நுழைந்தோம் கோவில் இருக்கும் இடத்துக்கு எந்த அறிவிப்பு பலகையும் கண்ணில் படாத்தால் வழியில் நிற்பவர்களை கேட்டு கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினோம்.கூட்டம் அதிகம் இல்லாத்தால் நல்ல தரிசனம் கிடைத்தது.இயற்கை உபாதைக்கு என்று பார்த்தால் ஒரு கழிவறை கூட சுற்றுவட்டாரத்தில் இல்லை,நல்ல வேளை ஒருவர் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள கழிப்பறை உபயோகப்படுத்த அனுமதித்தார்.மூச்சை அடக்கிக்கொண்டு போய்விட்டு வந்தோம்.



இன்னும் நேரம் இருப்பதை பார்த்து பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா? என்று ஒருவரிடம் கேட்ட போது படாளம் கூட்டு சாலையில் ஒரு 4 கி.மீட்டர் பயணித்தால் திருவையாவூர் என்ற இடத்தில் 108 திருப்பதிகளில் ஒன்றான இந்த கோவில் வரும் என்றார்கள்.சிறு குன்று போல் இருக்கும் இடத்தில் இக்கோவில் உள்ளது.நடந்து போக ஒரு வழியிருந்தாலும் காரிலில் போக வழியுள்ளது.மேலிருந்து பார்த்த போது இன்னொரு கோவில் மடத்துக்கு சொந்தமானது போலும் உள்ளே செல்லும் வழி மூடப்பட்ட நிலையில் இருந்தது.

Sunday, January 30, 2011

சின்ன வயசு ஆசை!

பள்ளியில் படிக்கும் காலங்களில் கோடைவிடுமுறை என்றால் கும்பகோணம் அருகில் இருக்கும் ஆடிப்பிலியூர் போவது என்பது கொஞ்ச வருடங்களுக்கு தொடர்ந்தது.இங்கு இருக்கும் பெரியப்பாவுக்கு நிறைய நிலம் மற்றும் தோட்டங்கள் இருந்தது அதனால் காலையில் எழுந்து சிறிய வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அப்படியே நிலபுலம் பக்கம் போனால் சாயங்காலம் தான் திரும்பி வருவேன்.வயலுக்கு போகும் போது செருப்பு போடக்கூடாது என்பதால் வெறும் காலுடன் பல கிலோமீட்டர் நடந்தே போய் வருவேன். எவ்வளவு தான் முள் குத்தினாலும் பிடிங்கிப்போட்டுவிட்டு ஜாலியாக கரும்பு வயலுக்குள் போய் வருவேன்.எவ்வளவு கரும்பு அப்படியே கடிச்சி சாப்பிட்டேன் என்ற கண்க்கே இல்லை.
வேலை/வெளிநாடு என்றாகிவிட்ட பிறகு பொங்கல் தவிர இந்த கரும்பை கடிச்சி சாப்பிட வாய்பே வாய்க்கவில்லை.சிங்கையில் இருக்கும் போது கரும்பு கிடைத்தாலும் ஓர் ஆளுக்காக வாங்கி சாப்பிட அலுப்பிலேயே சாப்பிடாமல் இருந்தேன்.
வெளிநாட்டு வேலையெல்லாம் முடிந்து உள்ளூரிலேயே வேலை வாய்த்த பிறகு முதல் பொங்கல் சமீபத்தில் வந்தது கரும்பு ஆசையை கிளப்பிவிட்டது.மனைவிக்கு என்ன்னுடய விருப்பம் தெரியும் என்பதால் 2 கரும்பாக வாங்கிவைத்துவிட்டார்.எனக்கு கரும்பை கத்தியால் சிறிது சிறிதாக நறுக்கி சாப்பிடுவது பிடிக்காது, பின்ன எப்படி?




கரும்பு துண்டு பெரிதாக இருக்கனும்.

Wednesday, December 23, 2009

பூமிக்கு கீழ்.

அடுத்த நிறுவனம் "பெயர் சொல்ல முடியாது".
எவ்வளவுக்கு எவ்வளவு பூமிக்கு மேல் வேலை பார்த்தேனோ அப்படியே பூமிக்கு கீழேயும் போக வேண்டிய வேலை வந்தது.அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் இடம் சில கி.மீட்டர் என்பதால் கம்பெனி நான்கு சக்கர வண்டி எடுத்துக்கொண்டுதான் போகனும்.அப்போது எனக்கு 4 சக்கர வாகனம் ஓட்டத்தெரியாது.சிறியவனாக இருக்கும் போதிலிருந்தே பல வேளைகளில் ஒட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து அவர்கள் அசைவுகள் மூலம் ஓரளவு தெரிந்துவைத்து மனதில் இருத்திக்கொள்வேன்.வேலை செய்ய வந்த பிறகும் கூட ECC யில் ஜீப்பில் முன் புறம் உட்காருவது என்பது தான் என் இஷ்டம்.இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறையாவது வட்டச்சக்கர கைப்பிடி என் கையில் வந்ததில்லை.கண் பார்த்து மனதில் நிறுத்தியதெல்லாம் வேலைக்காகுமா?அதெல்லாம் வெறும் பார்வை தானே!
வேலை இடத்துக்கு போவதென்றால் ஆரம்பத்தில் சக பொறியாளருடன் வண்டியில் தொற்றிக்கொள்வேன்.கொஞ்ச நாள் இப்படியே போனாலும் ஒரு நாள் என்னை அழைத்துப்போக யாரும் இல்லாத நிலையில் பொறியாளர் ஒருவர் வண்டி சாவியை என்னிடம் கொடுத்து "நீயே போய்ட்டு வா" என்று சொல்லி வண்டி ஓட்டத்தெரியும் இல்ல? என்றார்.ஏதோ அசட்டு தைரியத்தில் தெரியும் என்று சொல்லி வாங்கிவந்துவிட்டேன்.வண்டி Parking இடத்தில் இருந்தது.எதிரெதிரே வண்டிகளும் இருந்தன.முதலில் வண்டியை பின்புறம் எடுக்கனும்,ரிவர்ர்ஸ் கியர் போட்டு கிளட்சை மெதுவாக விட்டு ஆக்ஸிலெட்டரை அழுத்துகிறேன் வண்டி பின்பக்கம் போகவில்லை.மறுபடியும் கை பிரேக்கெல்லாம் சரியாக விடுபட்டிருக்கா என்று பார்த்து மறுபடியும் ஆக்ஸிலேட்டரை அழுத்தும் போது கொஞ்சம் பின்னால் போய் அப்படியே நின்றுவிட்டது.எங்களுக்கு கொடுத்த வண்டியெல்லாம் அரத பழசு என்று சொல்லமுடியாவிட்டாலும் அடிக்கடி மக்கர் செய்யக்கூடிய வண்டிதான். நான் இப்படி தினறுவதை பார்த்த ஒரு மியன்மார் ஓட்டுனர் என்னை கீழிறங்கச்சொன்னார்.அவர் கீழிறங்கச்சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது இருந்தாலும் இந்த தவறு மறுபடியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.அந்த மியன்மார் ஓட்டுனர் சரக் என்று பின்னால் எடுத்து வண்டியை முன்பக்கமாக நிறுத்தினார்,அதன் பிறகு எப்படியோ ஓட்டிப்போய் திரும்ப வந்தேன்.

என்ன தான் 2 வருட வேலை என்றாலும் அந்த இடத்திலேயே என்னை 5 வருடம் உட்கார்த்தி வைத்து வேடிக்கை பார்த்தது இந்த நிறுவனம்.தினம் காலை 8 மணிக்கு வரவேண்டியது மதியம் சாப்பிட வேண்டியது மாலை 5 மணிக்கு போக வேண்டியது என்ற பழக்கம் வேலை முடிந்து 2 வருடங்களாக போய்கொண்டிருந்தது.அடுத்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலை கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் அது வரும் வரை சும்மாகவே வைத்திருந்தார்கள். எனக்கு தான் கொடுமையாக இருந்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.இந்த கொடுமை என்னை அடுத்த வேலை இடத்துக்கு மாற்றும் வரை தொடர்ந்தது.இவர்கள் லாபம் எவ்வளவு இருந்தால் இந்த மாதிரி சம்பளம் கொடுக்கமுடியும் என்று வேறு விதமான மனக்கணக்கு போட ஆரம்பித்தேன்.

இங்கு செய்த பல வேலைகள் எனக்கு புதியவை ஆனால் வெளியில் சொல்ல முடியாதவை என்பதால் அப்படியே அப்பீட்டாகிக்கிறேன்.

இந்த மாதிரி அனாமத்த நேரங்களில் கிடைத்த செய்திதாளில் உள்ள வேலை நிலவரங்களை உண்ணிப்பாக பார்க்க ஆரம்பிதத்தின் விளைவு துபாய் பக்கம் போய் நின்றது.நடுவில் வந்த சில வேலைகள் சம்பள் இழுபறியால் கை நழுவிப்போனது.

இந்நிறுவனம் எதிர்பார்த்த வேலை இப்போதைக்கு இல்லை என்றதால் என்னை வேறு ஒரு வேலைக்கு அனுப்பினார்கள்.அங்கு இருந்த "தலை" 1960களில் உள்ள அறிவோடு வேலை செய்ததால் மற்றும் செய்யச்சொன்னதால் சீக்கிரமே விடுதலைபெற வேண்டிய கட்டாயம் வந்தது.

Friday, July 24, 2009

என்னிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

போன பதிவில் என்னுடைய பழைய நிறுவனம் என்னை பிடித்துவைக்க செய்த தந்திரங்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.
அதில் ஏன் அவர்கள் என்னை பிடித்துவைக்கவேண்டும்?
சிங்கையில் ஆளா இல்லை அதுவும் இவர்கள் கொடுக்கும் சம்பளத்தை தவிர்த்து பார்த்தால் இவர்கள் வேலையில் பெரிய பிரச்சனை/பிடுங்கல் என்று எதுவும் தெரியவில்லை.

என்னுடைய வேலை, வரை படத்தில் உள்ள வேலையை சரியாக செய்கிறார்களா? என்று கண்காணித்து கிளைண்ட் இஞ்சினியரை கூப்பிட்டு அதை அப்ரூவ் செய்ய வைக்கவேண்டும் அதன் மூலம் சில பேப்பர் வேலை இருக்கும்.இவ்வளவு தான்.

Photobucket

இருக்கும் 8 மணி நேரமும் வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.குத்தகைகாரரிடம் இருக்கும் ஃபோர்மேன் தான் தொழிலாளர் ஆட்களை கட்டி மேய்பார்கள் என்பதால் வேலை செய்யும் ஆள் --> ஃபோர்மேன் மூலம் வேலை நிலவரம் தெரிந்து பெரியவரை கூப்பிட்டு காண்பிக்க வேண்டும்.இது ஒரு நாளில் மிஞ்சி மிஞ்சி போன 2 மணி நேரம் தான் இருக்கும் (சில நாட்கள் 6 மணி நேர வேலையும் இருக்கும்).மீதி 6 மணி நேரத்தை எப்படி கழிப்பது?எனக்கென்னவோ அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு சைட்டே என் கையில் தான் இருக்கு என்று அலம்பல் பண்ணி ஓட்டத்தெரியாது,என் மண்டைக்கு வேலை இருக்கும் படி ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.வேலையில் இருந்துகொண்டு வேலையில்லாமல் இருப்பது தான் எனக்கு மன உலைச்சல்,அது கடந்த 5 வருடமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வேலையிடத்தில் இப்படி இருக்கும் என் உபரி நேரங்களை சும்மாக இல்லாமல் வேலை இடத்துக்கு போய் அங்கு என்ன செய்கிறார்கள் ஏதாவது உபகரணங்கள் தேவைப்படுகிறதா அல்லது வேலையிலேயே பிரச்சனை இருக்கா அதோடு பாதுகாப்பு பிரச்சனை ஏதும் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பேன்.இப்படி செய்யும் போதே ஒரு வேலையை தொழிலாளர் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பேன்.இதில் பல விஷயங்கள் தென்பட ஆரம்பித்தன.இப்படி ஒரு படி கீழிறங்கி பார்க்கும் போது வேலை செய்பவர்களுடன் நல்லுறவு வளர்ந்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களும் தெரிய ஆரம்பித்தது.அங்கு வேலை செய்பவர்களில் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்பவர்களும் இருந்தனர்.

ஒரு நாள் என்னுடைய வேலை முடிந்தும் வீட்டுக்கு போகாமல் சிறிது கால தாமதமாக புறப்பட்ட போது சைட்டே நிசப்தமாக இருந்தது.ஸ்டீல் வேலை என்பதால் எப்போதும் சப்தமாக இருக்கும் இடம் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கு என்று வேலை நடக்கும் இடத்துக்கு போய் பார்த்தால் அவரவர் வேலையை விட்டு விட்டு வெறுமனே உட்கார்ந்திருந்தார்கள்.நான் வருவதை பார்த்த ஓரிருவர் வேலை செய்ய தொடங்கினர்.மற்ற சிலரிடம் பேசிய போது அவர்கள் மிகவும் டயர்டாக இருப்பதாகவும் சொன்னார்கள்.சரி டயர்ட் எவ்வளவு நேரம் இருக்கும்? ஒரு அரை மணி நேரம்? மணி இப்போது அதையும் தாண்டி 1 மணி நேரமாகிறது என்று சுட்டிக்காட்டேன்.என்னுடைய பேச்சு அவர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை,வேறு வழியில்லாமல் வேலையை தொடர சென்றார்கள்.

மறு நாள் காலை ஒரு 10 நிமிடம் முன்னதாக வந்து குத்தகைக்காரர் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலைக்கு போகும் முன்பு கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டு அனைவரிடமும் பேசினேன்.

நீங்கள் எல்லோரும் ஓரளவு படித்தவர்கள் அதனால் ஆங்கிலத்தில் உரையாடுகிறேன் அது புரியாதவர்களுக்கு தமிழில் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு,நேற்று நான் கண்காணித்ததையும் அதனால் அவர்கள் முதலாளிக்கு மற்றும் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்புகளையும் விவரித்தேன்.சில நிமிடங்கள் வரை யாரும் பேசவில்லை.உங்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது என் வேலை அல்ல அப்படி செய்தால் என் வேலையை நான் பார்க்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைத்து நம் முதலாளிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள் அதனால் நமக்கும் தொடர்ந்து வேலை கிடைத்துக்கொண்டிருக்கிறது.நாம் அவர்களை ஏமாற்றி Overtime செய்ததாக சொல்லி பணம் ஈட்டினால் கொஞ்ச நாளில் கம்பெனி நொடித்து நம் வேலையும் நம்மை விட்டு போய்விடும் அதனால் ஓரளவுக்கு அவர்களை ஏமாற்றாமல் வேலை செய்வோம் என்று Advise செய்தேன்.இது அவ்வளவும் சொன்ன பிறகு ஒரு தொழிலாளி “நாங்கள் வேலை செய்வதற்கேற்ற சம்பளம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் வருடாந்திர சமபள உயர்வு கூட அவ்வளவாக இல்லை” என்றார்.
சம்பளம் போதவில்லை என்று இப்போது சொல்லி பிரயோஜனம் இல்லை.ஊரில் வேலைக்கு எடுக்கும் போது சொன்ன சம்பளம் கொடுக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள்.சம்பளம் போதவில்லை என்ற நிலையில் ஏன் இங்கு வேலை பார்க்கிறீர்கள்? வேறு இடம் தேடலாமே என்றேன் அதற்கு அந்நபரிடம் இருந்து பதில் இல்லை.சம்பள உயர்வு பற்றி மேலிடத்தில் பேசிப்பார்க்கிறேன் ஆனால் உத்திரவாதம் கொடுக்கமுடியாது என்று என் நிலையை காப்பாற்றிக்கொண்டேன்.

மறு நாளில் இருந்து வேலை அதன் வேகத்தில் நடக்க ஆரம்பித்தது.நேற்று நடந்த இந்த மீட்டிங்கை பற்றி நான் என் தலையிடம் சொல்லவில்லை என்றாலும் குத்தகைக்காரர் தொழிலாளர் மூலம் போய் சேரவேண்டிட இடத்துக்கு சேர்ந்துவிட்டது.இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்தது ஆதாவது என்னை கண்காணிக்க எனக்கு பின்னாளேயே ஆள் வைத்திருக்கிறார்கள்.மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்.நான் என்னுடைய பணியில் கவனமாக இருந்ததால் Consultant இடம் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்கொண்டிருந்ததில் எனக்கு மேல் இருந்த தலை மற்றும் அவருக்கு மேல் இருந்த தலைக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நான் போகிறேன் என்றால் யார் தான் விடுவார்கள்.கூடிய மட்டும் நம் வேலையில் மட்டும் நம்மை சுருக்கிக்கொள்ளாமல் சுற்று வட்டாரத்திலும் கவனம் செலுத்தினால் முன்னேறலாம்.